Malaysia

ஜாவி, ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோயிலில் கந்த சஷ்டி கவசம் பராயணம் மிக சிறந்த ஏற்பாட்டில் கந்த பெருமானுக்காக எடுக்கப்பட்ட ஒரு பெருவிழாவாக நடத்தப்பட்டது

பினாங்கு மாநில தேசம் செய்தியாளர் மு.வ.கலைமணி

பினாங்கு, அக்.9-
சுங்கை ஜாவி எனும் திருநகரில் புதுக்கோலம் பூண்டு கதிரவனாய் எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ தண்டாயுதபாணி எனும் திருமுருகக் கடவுள்.

தமிழ் நாட்டு திருக்கோயில்களை மிஞ்சும் அளவிற்கு நவீன மாளிகைகளாக கட்டட கலையில் சிறந்து விளங்கும் நூற்றாண்டுகள் கடந்து புது தோற்றத்துடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்களை ஈர்த்து வைத்துள்ள இத்திருக்கோயிலில் அண்மையில், கந்த சஷ்டி கவச பராயணம் திரளான பக்தர்களின் வருகையில் மிக சிறப்பாக நடந்தேறியது.

சிவஸ்ரீ தினேஷ் வர்மன் அவர்களின் சொற்பொழுவு பக்தர்களின் செவிகளுக்கு பக்தியின் மகிமையை மேலும் ஊட்டியது எனலாம்.

இந்த விழாவிற்கு வருகை தந்த அனைத்து பக்தர்களும் ஒன்றுக் சேர்ந்து பாடிய திருமுருகனின் பாமாலைகள் திருக்கோயிலை பக்தி பரவசமாக்கியது.

சுற்று வட்டார பக்த பெருமக்களுடன் திருமுருக பக்தர்கள் நாடு தழுவிய அளவில் வருகை தந்து பராயணத்தில் கலந்துக் கொண்டனர்.

அடுத்தடுத்து இதுப்போன்ற நிகழ்வுகளை தொடர்ந்து நடத்தும்படி ஏற்பாட்டுக்குழுவினரை பக்தர்கள் கேட்டுக் கொண்டனர்.

மொத்தத்தில் இவ்வட்டார மக்களின் ஏகோபித்த பேராதரவினை இந்நிகழ்வின் வழி ஏற்பாட்டாளர்கள் பெற்றுக் கொண்டனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button