Malaysia

இவ்வாண்டு 13,749 புதிய ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்

கோலாலம்பூர், டிச.5– கல்விச் சேவை ஆணையத்துடன் (SPP) இணைந்து, கல்வி அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் இவ்வாண்டு 13,749 புதிய ஆசிரியர்களை பணியமர்த்தியுள்ளது.

அக்டோபர் 31 ஆம் தேதி நிலவரப்படி, தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகளுக்கான ஆசிரியர் வேலைவாய்ப்பு விகிதம் முறையே 97.62 சதவீதம் மற்றும் 95.16 சதவீதம் என்று கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் தெரிவித்தார்.

“ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சனையை நாங்கள் விவேகமாக தீர்க்கிறோம். இந்த சிக்கலை படிப்படியாகவும் தொடர்ச்சியாகவும் தீர்க்கும் கல்விச் சேவை ஆணையம் மற்றும் கல்வி அமைச்சின் திறனில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்,” என்று மக்களவையில் தனது அமைச்சகத்திற்கான வழங்கல் மசோதா 2025 மீதான குழு நிலை விவாதத்தை முடித்தபோது அவர் கூறினார்.

இதற்கிடையில், அக்குழுவில் உள்ள ஊழியர்களுக்கான வேலை வாய்ப்பு விகிதம் 2023 இல் 84 சதவீதத்துடன் ஒப்பிடும்போது,நவம்பர் 30இல் 97 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button