
Malaysia
பங்கோர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய மாசிமகத் திருவிழா டத்தோஸ்ரீ எம்.சரவணன் பங்கேற்பு
பங்கோர்,மார்ச் 13-
பங்கோர் ஸ்ரீ பத்ரகாளியம்மன்
ஆலயத்தின் மாசி மகத் திருவிழாவில் ம.இ.கா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கலந்து கொண்டார்.
பங்கோர் தீவில் உள்ள பாசிர் போகா ஆற்றங்கரையில் இருந்து சக்தி கரகம் எடுக்கப்பட்டு ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படட்டது. அம்மனின் அருளைப் பெற பக்தர்கள் கூட்டம் பெருகிவர, ஊர்வலமாய் வந்த அம்மனைக் காண ஆனந்தமாய் இருந்தது.

கருணைக் கடல்தேவி காளியம்மா
எங்கள் கவலைகள் தீர்த்திட வாருமம்மா..
காணும் பொருள்தனில் நீதானம்மா
என்றும் கண்டுகொண்டேன் உந்தன் அருள்தானம்மா என்று பயபக்கியோடு தரிசனம் செய்தார் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான
டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன்.



