
தெலுக் இந்தான் ராமசந்திரன் கடை பிரச்சினை டத்தோ தொ.முருகையா பேச்சு நடத்தி தீர்வு கண்டுள்ளார்
தெலுக் இந்தான்,மே 27-
மலேசிய இந்தியர்களின் தலைவிதியைப் பாதுகாப்பதில் மஇகா இன்னும் பொருத்தமானது என்பதை ம.இ.கா தேசிய தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தலைமையிலான ம.இ.கா நிரூபித்துள்ளது.
ம.இ.கா தேசிய உதவித் தலைவர் டத்தோ தொ. முருகையா போன்ற மஇகா தலைவர்கள் ம.இ.கா இன்னும் உறுதி பெற்று இருப்பதை நிரூபித்துள்ளனர்.
தெலுக் இந்தான் மாநகராட்சி அதிகாரத்திற்கு உட்பட்ட கடை விவகாரம் தொடர்பில் குத்தகையாளர் ராமசந்திரன் மற்றும் தெலுக் இந்தான் மாநகராட்சி மன்றத்திற்கும் இடையே எழுந்துள்ள ஒரு பிரச்சனைக்கு டத்தோ தொ.முருகையா தீர்வு கண்டுள்ளார்.
இந்த கடை விவகாரம் தொடர்பில் தெலுக் இந்தான் நகராட்சி மன்றத்தின் YDP ஜைருல் அக்மல் காசிமைச் சந்தித்து பேசியதாகவும் அவரை மன்னித்து கடை வழங்கும்படியும் கேட்டுக் கொண்டதாகவும் டத்தோ முருகையா தெரிவித்தார்.
கடந்த மே 8ஆம் தேதி ராமச்சந்திரன் தேவர் என்ற கடை குத்தகையாளர் தெலுக் இந்தான் மாநகராட்சி மீது அதிருப்தி அடைந்ததால் அதன் பிரதான கண்ணாடி நுழைவாயில் கதவை சுத்தியல் கொண்டு உடைத்துள்ளார்.
சித்ரா பௌர்ணமி விழாவுடன் இணைந்து ஒரு தற்காலிக வணிக கூடாரம் ராமச்சந்திரன் தேவரின் கடையை மறைத்ததால் இந்த அதிருப்தி எழுந்தது.
ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி பண்டிகையின் போது அவரது கடை தற்காலிகக் கடைகளால் அடைக்கப்படுவதால் அவர் கோபமடைந்தார். கடந்த ஆண்டு தெலுக் இந்தான் மாநகர் மன்றத்திடம் புகார் செய்திருந்தார்.
ஆனால் இந்த ஆண்டும் அதே விஷயம் நடந்தது, இதனால் ராமச்சந்திரன் மாநகராட்சி கண்ணாடி கதவை உடைத்தார். இதனால் அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு மூன்று நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பான குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருக்கும் நிலையில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதனால் தெலுக் இந்தான் மாநகர் மன்றம் வாடகைக் கடையைத் திரும்பப் பெற்றது. இது சம்பந்தமாக தெலுக் இந்தான் மாநகர் மன்றத்திடம் பேச்சு நடத்நப்பட்டது ராமச்சந்திரன் தேவர் ஒரு ஊனமுற்ற நபர் என்பதைக் கருத்தில் கொண்டு, ராமச்சந்திரன் தேவரின் சார்பாக YDP ஜைருல் அவர்களிடம் மேல்முறையீடு செய்யப்பட்டது.
YDP மிகவும் அன்பானவர், நட்புரீதியான சேவையை வழங்கியுள்ளார், மேலும் சூழ்நிலையை நன்கு புரிந்துகொள்கிறார். இந்த பேச்சுவார்த்தையின் விளைவாக ராமச்சந்திரன் அதே வாடகைக் கடையை வழங்க YDP ஒப்புக்கொண்டார். மேலும் காவல்துறை வழக்கையும் வாபஸ் பெற புலனாய்வு அதிகாரியிடம் பேசுவதாக YDP உறுதியளித்ததாக
டத்தோ முருகையா தெரிவித்தார்.
கண்ணாடி கதவை உடைத்ததற்காக இழப்பீடு வழங்க ராமச்சந்திரன் ஒப்புக்கொண்டார். எனவே, மக்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்க வேண்டாம், மாறாக தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்த சரியான வழிகளைப் பின்பற்ற வேண்டும். இந்த YDP ரொம்ப நல்ல மனிதர் என்பதால் ஏதாவது பிரச்சனை இருந்தால் அவரை சந்திச்சு தீர்க்க முயற்சி பண்ணுங்கள் அல்லது தன்னை சந்திக்கலாம் என்று டத்தோ முருகையா கேட்டுக் கொண்டார்.
இந்த விவகாரம் தொடர்பில் தனக்கு உதவ முன்வந்த தான் ச.ஸ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஸ்ரீ எம்.சரவணன், டத்தோ தொ.முருகையா, மஇகா கட்சிக்கும் ராமச்சந்திரன் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



