
Malaysia
தன் படத்தை வைத்து சிங்கப்பூர் அரசாங்கத்தைக் குறைகூறும் காணொலி பொய்யானது முன்னாள் அதிபர் ஹலிமா யாக்கோப் விளக்கம்
சிங்கப்பூர்,ஏப்.15-
தன் படத்தை வைத்து சிங்கப்பூர் அரசாங்கத்தைக் குறைகூறும் காணொலி பொய்யானது என்று சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் ஹலிமா யாக்கோப் விளக்கமளித்துள்ளார்.
இந்த போலித் காணொலியைப் குறித்து காவல்துறையிடம் புகார் செய்துள்ள நிலையில்
அந்த காணொலியில் இடம்பெற்றுள்ள ஒரு குரல் பதிவு தம்மை போலவே இருப்பதாக ஹலிமா தெரிவித்தார்.
சிங்கப்பூர் அரசாங்கத்தின் பொதுத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி
இத்தகைய மோசடிகள் நடத்தப்படுகிறது என்று ஹலிமா சொன்னார்.



