
Malaysia
பிறை இல்லாத மலேசிய கொடி சின் சியூ செய்தி நிறுவனத்தின் பொறுப்பாளர்கள் விசாரணைக்கு அழைப்பு
புத்ராஜெயா, ஏப்.16-
சீன அதிபர் ஷீ ஜின் பிங்கின் மலேசிய வருககையின் செய்தியில் மலேசிய கொடியில் பிறை இல்லாத சம்பவம் தொடர்பில் சின் சியூ நாளிதழ் பொறுப்பாளர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
பிறை இஸ்லாத்தை கூட்டாட்சி மதமாகக் குறிக்கும் நிலையில் அவர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டதோடு அவர்களிடம் காரணம் கோரும் கடிதத்தை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டதாக உள்துறை அமைச்சு அறிக்கை ஒன்றில் கூறியது.
நாட்டின் நிலைத்தன்மை, நல்லிணக்கத்தை அச்சுறுத்தும் முயற்சிக்கு எந்தவொரு தரப்பினரையும் அமைச்சு பொறுத்துக் கொள்ளாது என அந்த அறிக்கை மேலும் கூறியது.



