Malaysia

கெஅடிலான் கட்சியின் உச்சமன்றத் தேர்தல் அமைச்சர் டத்தோ பாமி பட்சில் போட்டி

கோலாலம்பூர் மே 10-

கெஅடிலான் கட்சியின் உயர்மட்ட பதவிகளுக்கு கடுமையான போட்டி ஏற்பட்டுள்ள வேளையில் தகவல் தொடர்பு துறை அமைச்சர் டத்தோ பாமி பட்சில் உச்சமன்றத்திற்கு போட்டியிடுகிறார்.

லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினராக வலம் வரும் அமைச்சர் ஃபாமி பாட்சில் மே 9 வெள்ளிக்கிழமை உச்சமன்றத்திற்கு தமது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக கெஅடிலான் கட்சியில் அங்கம் வகிக்கும் அமைச்சர் பாமி பட்சில் மிகச் சிறந்த அரசியல்வாதி என்பதற்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

இந்த ஆண்டு கட்சித் தேர்தலில் மக்கள் நீதிக் கட்சியின் உச்சமன்ற தலைமைத்துவக் குழுவிற்கு (MPP) வேட்பாளராக என்னை முன்மொழிகிறேன் என்பதை பணிவுடன் அறிவிக்க விரும்புகிறேன்.

நான் இந்த முடிவை எடுத்தது எனது நிலைப்பாட்டின் காரணமாக அல்ல, மாறாக போராட்டத்தின் மீதான நம்பிக்கையில் என்று பாமி பட்சில் சொன்னார்.

இந்த சீர்திருத்த இயக்கத்தில் இரண்டரை தசாப்தங்களுக்கும் மேலாக நாங்கள் ஒன்றாக இருக்கிறோம்.

தெருக்களில் இருந்து புத்ராஜெயா வரை மக்களுக்கு நீதி கோருவது முதல், அனைத்து மலேசியர்களுக்கும் மிகவும் நியாயமான மற்றும் வெளிப்படையான அமைப்பை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகள் வரை நான் போராட்ட களத்தில் இருந்து இருக்கிறேன்.

 

கெஅடிலான் என்பது வெறும் அரசியல் கட்சி மட்டுமல்ல, கொள்கை அடிப்படையிலான சீர்திருத்தத்திற்கான ஒரு தளம் என்று நான் நம்புகிறேன்.

அந்த நோக்கத்திற்காக 1998 முதல் பெறப்பட்ட நேர்மை, விடாமுயற்சி மற்றும் துணிச்சலின் மதிப்புகளை பிரதிபலிக்க வேண்டும்.

நீதியை உயர்ந்த நிலைக்கு உயர்த்த உங்கள் ஆதரவு எனக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன் என்று டத்தோ பாமி பட்சில் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button