
Malaysia
அண்ணியின் அடையாளக் கார்டை வைத்து பிரசவத்திற்க்கு பதிவு அய்ஷா இராமலிஙகத்திற்கு இரண்டாயிரம் வெள்ளி அபராதம்
ஈப்போ, ஆக-23
அண்ணியின் அடையாள அட்டை பயன் படுத்தி தமக்கு பிறக்க போகும் குழந்தையின் தந்தை தனது அண்ணனுக்கு பிறதது என பதிவு செய்ய முயற்சித்த
செயலுக்காக இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதியாளர்
எஸ்.புனிதா என்பவர்
39 வயது அய்ஷா இராமலிங்கம் என்ற பெண்ணுக்கு
இரண்டாயிரம் வெள்ளி அபராதம் விதித்தார்.
38 வயது நிரம்பிய மாதுவின் அடையாள அட்டையை ஈப்போ ராஜா பெர்மாய்சூரி
பைனுன் மருத்துவமனை பிரசவ பிரிவில் மே மாதம் 6 ஆம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.
கடந்த மே மாதம் 2 ஆம் தேதி.மேற் கொள்ளப்பட்ட இரத்த சோதனையில்
இவரின் இரத்த பரிசோதனை முடிவும்
பிரசவ பிரிவில் பதிந்த பெயர் கொண்டவரின் இரத்த சோதனை.முடிவானது மாறுப்பட்டிருப்பதாக குற்ற பதிவேட்டில்
குறிப்பிடப்பட்டது.



