
“பட்டம் விடலாம் வாருங்கள் ” பல தொழில்முனைவர்களை ஊக்குவிக்கிறது !
தேசம் செய்திகள் கவிஅரசன் அன்பரசன்
மலாக்கா,அக்.6 – உலக சுற்றுலா தினம் (WTD) 2025 உடன் இணைந்து சர்வதேச பட்டம்விடும் விழா மலாக்காவின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், தொழில்முனைவர்களை ஊக்குவிக்கின்றது.இவ்விழாவில் 50 சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவர்களை ஒன்றிணைக்கிறது. பாரம்பரிய கலை மற்றும் பொருளாதார அதிகாரமளித்தல் ஆகிய இரண்டு முக்கிய கூறுகளை ஒரே கட்டத்தில் இணைப்பதற்கான ஆக்கப்பூர்வமான திட்டம் பாராட்டத்தக்கது என்று முதலமைச்சர் டத்தோஸ்ரீ உத்தாமா அப்துல் ரவூப் யூசோப் கூறினார். மாநிலத்தின் சுற்றுலா மற்றும் தொழில்முனைவோர் நிகழ்ச்சி புதியதாகவும், துடிப்பானதாகவும், போட்டித்தன்மையுடனும் வைத்திருக்க அரசாங்கத்தின் முயற்சிகளுடன் இந்த நடவடிக்கை ஒத்துப்போகிறது என்று அவர் விளக்கினார். எனவே, உலகளாவிய கலாச்சார நிகழ்வுடன் ஒருங்கிணைத்து, இந்நிகழ்வு முத்தாய்ப்பாக வெளிப்படுகிறது, பாரம்பரியத்தின் அழகைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், உள்ளூர் மற்றும் சர்வதேச பட்டம் விடும் வீரர்களுக்கு புதுமைகளைத் தூண்டுகிறது,” என்று அவர் கூறினார். இந்த சர்வதேச பட்டம் விடும் விழாவில் மலேசியா மட்டுமல்லாது சிங்கப்பூர், வியட்நாம், உக்ரைன், பிரான்ஸ், தாய்லாந்து போன்ற வெளிநாட்டு பிரதிநிதிகள் மற்றும் மக்காவ், நான்ஜிங் மற்றும் குவாங் டோங் போன்ற சீனாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பங்கேற்பாளர்கள் 120க்கும் மேற்பட்ட பட்டம் விடும் வீரர்கள் இவ்விழாவில் கலந்து சிறப்பித்தனர். அதே நேரத்தில், இந்த விழாவில் மலாக்காவின் வானத்தை அலங்கரிக்கும் பல்வேறு சின்னங்களின் 100க்கும் மேற்பட்ட பட்டம் விடும் காட்சிகளும் இடம்பெற்றன, இதனால் பட்டம் விடும் கலையானது பல எல்லைகளைக் கடந்து கலாச்சாரங்களையும் நட்பையும் இணைக்கும் பாலமாக இருக்க முடியும் என்பதை பிரதிபலிக்கிறது.ஒற்றுமையின் அடையாளமாக, மலேசியாவில் உள்ள மிகப்பெரிய கொடி பட்டத்தை மலாக்கா மாநிலத்தைச் சேர்ந்த டீம் இம்பியன் 10 x 20 மீட்டர் அளவில் பறக்கவிட்டார்,” என்றும் அவர் கூறினார்.





