
Malaysia
ஏய்ம்ஸ்ட் கல்லூரி அடுத்த ஆண்டு செயல்படத் தொடங்கும் ம.இ.கா மாநாட்டில் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் அறிவிப்பு
தேசம் செய்திகள் குணாளன் மணியம்
ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்
கோலாலம்பூர், செப்.15-
ம.இ.காவின் ஏய்ம்ஸ்ட் கல்லூரி அடுத்தாண்டு செயல்படத் தொடங்கும் என்று ம.இ.கா தேசிய தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.
பெட்டாலிங் ஜெயாவில் ஏய்ம்ஸ்ட் கல்லூரி தற்போது மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருகிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் மறுசீரமைப்பு வேலைகள் முடிவடைந்துவிடும். ஆகையால், ஏய்ம்ஸ்ட் கல்லூரி அடுத்த ஆண்டு செயல்படத் தொடங்கும் என்று ம.இ.காவின் 78ஆவது மாநாட்டில் உரையாற்றிய தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
இந்த ஏய்ம்ஸ்ட் கல்லூரி அடுத்தாண்டு செயல்படத் தொடங்கும் போது அறிமுக விழாவிற்கு அனைவரையும் அழைப்போம். நீங்கள் வந்து பாருங்கள் என்று தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.



