Malaysia

சித்திரைப் புத்தாண்டு ஒரு நல்ல தொடக்கமாக அமையட் டும் டத்தோஸ்ரீ எம்.சரவணன் சித்திரை புத்தாண்டு, விஷுப்புத்தாண்டு, வைசாக்கி புத்தாண்டு வாழ்த்து

கோலாலம்பூர், ஏப்.13-
இந்துக்கள் கொண்டாடும் சித்திரைப் புத்தாண்டு , சீக்கியர்கள் கொண்டாடும் வைசாக்கி , மலையாள வம்சாவளியினர் கொண்டாடும் _விஷு அசாம்ஷங்கள் என அனைவருக்கும் ம.இ.கா தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தமது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரவித்துக் கொண்டுள்ளார்.

இந்துக்களின் மரபு தொட்ட பெருமைகளைத் தாங்கி வரும் சித்திரைப் புத்தாண்டு ஒரு நல்ல தொடக்கமாக அமைய வேண்டும்.
அனைவருக்கும் நல்லதைத் தரும் ஒரு பொன்னான ஆண்டாக மலர வேண்டும். புதிய நம்பிக்கைகளை விதைத்து, நம் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணமும், மகிழ்ச்சியோடும் நம்பிக்கையோடும் நிரம்பி இருக்க வேண்டுமெனவும், குடும்பத்தில் ஒற்றுமை, சமூகத்தில் அன்பும் அமைதியும் நிரம்பி வாழ வேண்டும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கேட்டுக் கொண்டார்.

இந்த ‘விசுவாவசு’ வருடம் உங்கள் வாழ்வில் அனைத்து நலன்களையும் கொண்டுவர என் இதயம் கனிந்த வாழ்த்துகள். எல்லா வலமும் நலமும் பெற இறைவனை வேண்டுகிறேன்.
அனைவருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவணன் தமது வாழ்த்து செய்தியில் கூறினார்.

இதனிடையே வசந்த காலத்தின் வண்ணமயமான தென்றலோடு மலர்ந்து வரும் விஷு பண்டிகை, மலையாளிகளின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான திருநாளாகத் திகழ்கிறது என்று மலையாளிகளுக்கு விடுத்த விஷு புத்தாண்டு வாழ்த்து செய்தியில் டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.

இந்தப் புதிய ஆண்டின் தொடக்கம், புதிய நம்பிக்கைகள், இலக்குகள் மற்றும் ஆற்றல்மிக்க துவக்கங்களின் அஸ்திவாரமாக அமைகிறது.
விஷு என்பது விழிப்புணர்வை ஏற்படுத்தும் புனித நாளாகவும், மனமகிழ்வோடு குடும்பத்தினருடன், உறவுகளுக்கிடையிலான பாசத்தையும் மகிழ்ச்சியையும் வலுப்படுத்துகிறது என்று கூறிய டத்தோஸ்ரீ சரவணன் தமது இனிய விஷு அசாம்ஷங்களை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் சீக்கிய சமுதாயத்தினருக்கு வைசாக்கி என்பது புத்தாண்டின் ஆரம்பத்தைக் குறிக்கும் ஒரு மகத்தான நாளாக அமைகிறது என்று தமது வைசாக்கி வாழ்த்தில் டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.

இது விவசாய அறுவடைக் காலத்தையும் குறிக்கிறது. பக்தியும், சிந்தனையும், சமூக ஒற்றுமையையும் கொண்டாடும் இந்த நாள், சீக்கியர்களின் ஆன்மிக அகவாழ்வையும், சமூக பங்களிப்பையும் பிரதிபலிக்கிறது.
இந்த வைசாக்கி விழா, உங்கள் வாழ்க்கையில் நம்பிக்கை, ஆனந்தம், ஒளி, மற்றும் உன்னத இலக்குகளை நோக்கிச் செல்லும் ஆற்றலை தரட்டும். அனைவருக்கும் அமைதியும் வளமையும் நல்கும் புத்தாண்டாக இது அமைய வாழ்த்துகிறேன் என்று கூறிய டத்தோஸ்ரீ சரவணன் சீக்கியர்கள் அனைவருக்கும்
இனிய வைசாக்கி நல்வாழ்த்துகள் தெரிவித்துக் கொண்டார்.

ஆக ஒன்றாக மலரும் இந்த புத்தாண்டுகள் நமக்கு நன்மை பயக்கும் என்ற நம்பிக்கையோடு ஒன்றாகப் பயணிப்போம். ஒற்றுமையைக் கடைப்பிடிப்போம் என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button