
பத்தாங் பெர்ஜூந்தை, சுங்கை டாரா கல்லுக்குழி ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தில் “பிரவாசி பாரதிய சம்மன்” விருது பெற்ற தான்ஸ்ரீ சுப்ரமணியம் அவர்களுக்கு பாராட்டு விழா ஆலய தலைவர் ராமகணேசன் ஆலய நிர்வாகம் சார்பில் கௌரவிப்பு
கோல சிலாங்கூர்,மார்ச் 19-
பத்தாங் பெர்ஜூந்தை, சுங்கை டாரா கல்லுக்குழி ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய கும்பாபிஷேகத்திற்கு 75 ஆயிரம் வெள்ளி நிதி வழங்கி உதவிய முன்னாள் அமைச்சரும் முன்னாள் ம.இ.கா தேசிய தலைவருமான தான்ஸ்ரீ எஸ்.சுப்ரமணியம் அவர்கள் பாரதிய திவாஸ் மாநாட்டில் “பிரவாசி பாரதிய சம்மன்” விருது பெற்றமைக்கு ஆலய நிர்வாகத்தின் சார்பில் கௌரவிப்பதில் பெருமை கொள்வதாக ஆலயத்தின் தலைவர் திரு.ராமகணேசன் கூறினார்.
மலேசிய திருநாட்டில் தனது அளப்பரிய சமூகத் தொண்டினால் பல பட்டங்களையும் பதவிகளையும் பெற்றுக் கொண்டிருக்கின்ற தான்ஸ்ரீ சுப்ரமணியம் அவர்களுக்கு இந்திய அரசு”பிரவாசி பாரதிய சம்மன்” விருது வழங்கி கௌரவித்திருப்பது மலேசியத் தமிழ் சமுதாயத்திற்கு பெருமை சேர்க்கின்ற விஷயமாகும் என்று ஆலயத்தில் நடந்த பாராட்டு விழாவில் உரையாற்றிய பொது ராமகணேசன் அவ்வாறு தெரிவித்தார்.

இந்த வேளையில் தான்ஸ்ரீ சுப்ரமணியம் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை ஆலய நிர்வாகம் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது ஆலயம் திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற போது அந்த நேரத்தில் சுகாதார அ



