
நம்பி வாக்களித்தும் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்ற இந்தியர்களின் மன ஆதங்கம் எனக்குப் புரிகிறது! பல விஷயங்களை கட்டமைக்க கால அவகாசம் தேவைப்படுகிறது நூருல் இஸா அன்வார் கருத்து
தேசம் செய்திகள் குணாளன் மணியம்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்
கோலாலம்பூர் மே 18-
நம்பி வாக்களித்த இந்திய சமுதாயத்தின் உணர்வுகள் எனக்கு நன்றாக புரிகிறது. பல விஷயங்களை கட்டமைக்க கால அவகாசம் தேவைப்படுகிறது என்று லெம்பா பந்தாய் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் நூருல் இஸா அன்வார் கூறினார்.
கெஅடிலான் துணை தலைவர் பதவிக்கு போட்டியிடும் நூருல் இஸா அன்வார் தமிழ் ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாடினார். இந்த சந்திப்பில் அவரிடம் பல கேள்விகள் முன் வைக்கப்பட்ட போது அனைத்து கேள்விகளுக்கும் முகம் சுளிக்காமல் பதில் கொடுத்தார் நூருல் இசா.
இந்த சந்திப்பில் தேசம் குணாளன் மணியம் இந்திய சமுதாயத்தின் ஆதங்கம் குறித்து ஒரு கேள்வியை முன் வைத்தார். நாட்டின் 15ஆவது பொதுத்தேர்தலில்
இந்தியர்கள் டத்தோஸ்ரீ அன்வாருக்கு வாக்களித்தனர். ஆனால், கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பது மக்கள் ஆதங்கம். அது குறித்து உங்கள் கருத்து என்ன? எனும் கேள்வி முன்வைக்கப்பட்டது.
பக்கத்தானுக்கு ஆதரவாக இந்திய சமுதாயம் நம்பி வாக்களித்தது.
ஆனால் இந்திய சமுதாயத்தின் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை.
இது சமுதாயத்தின் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பது இந்திய சமுதாயத்தின் ஆதங்கம்.
இந்திய சமுதாயத்தின் உணர்வுகள் எனக்கு நன்றாக புரிகிறது.
இந்தியர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண பல்வேறு விவகாரங்கள் கட்டமைக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு திட்டமும் முறையாக கட்டமைக்கப்பட்டு வருகிறது. அனைத்தும் முறையாக அமல்படுத்த கால அவகாசம் தேவைப்படுகிறது. மேலும் அனைவரின் ஆதரவும் தேவைப்படுவதால் இந்தியர்கள் அமைதி காக்க வேண்டும் என்று நூருல் இசா கேட்டுக் கொண்டார்.
அண்மையில் கிள்ளான் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்திய சமுதாயத்தின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்திய சமுதாயத்தின் கல்வி, பொருளாதாரம், சமூக சீர்கேடுகளும் இதில் அடங்கும். இதனை அமல்படுத்த கால அவகாசம் தேவைப்படுகிறது என்று நூருல் இசா தெரிவித்தார்.
இந்தியர்களின் பல்வேறு பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டு பல விவகாரங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இதற்கு நீண்ட காலம் தேவைப்படுகிறது. அவை கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கட்டமைக்கப்பட்டு அதனை அமல்படுத்த சரியான தருணம் விரைவில் வரும் என்று நூருல் இசா பதிலளித்துள்ளார்.



