
Malaysia
கடுமையான போக்குவரத்து குற்றங்களுக்கு நீதிமன்ற குற்றப்பதிவு அமைச்சர் அந்தோணி லொக் தகவல்
கடுமையான போக்குவரத்து குற்றங்களுக்கு நீதிமன்ற குற்றப்பதிவு அமைச்சர் அந்தோணி லொக் தகவல்
கோலாலம்பூர், ஜன.19-
சீனப்புத்தாண்டில் நெடுஞ்சாலை மற்றும் சாலைகளில் முந்திச் செல்லுதல், இரண்டு கோடுகளில் முந்திச் செல்லுதல், சமிக்ஞை விளக்கை மீறிச் செல்லுதல், வாகன வேக கட்டுப்பாட்டை மீறுதல், கைப்பேசி பயன்படுத்துதல், வாகனப்பட்டையை தவிர்த்தல், ஆபத்து,அவசர பாதையில் பயணித்தல் ஆகிய போக்குவரத்து குற்றங்களை புரியும் வாகனமோட்டிகள் நேரடியாக நீதிமன்றம் செல்ல குற்றப்பதிவு வழங்கப்படும் ்என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லொக் கூறியுள்ளார்.



