MalaysiaPolitics

தான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் மற்றும் ஜொகூர் ம.இ.கா தலைவர் ரவின் குமார் கிருஷ்ணசாமி தலைமையில் ஜொகூர் ம.இ.கா தொடர்ந்து சேவையாற்றும்! தேசிய முன்னனிக்கு ஆதரவு வழங்கும்! திரு.ராமதாஸ் சுந்தரம் சூளுரை

ஜொகூர், ஜூலை 12- ம.இ.கா தேசிய தலைவர் தான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் மற்றும் ஜொகூர் மாநிலத் ம.இ.கா தலைவர் ரவின் குமார் கிருஷ்ணசாமி தலைமையில் ஜொகூர் ம.இ.கா தேசிய முன்னனிக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவதோடு இந்திய மக்கள் நலனில் தொடர்ந்து கவனம் செலுத்தும் என்று சிகிஞ்சாங் ம.இ.காவின் நிரந்தர தலைவர் திரு.ராமதாஸ் சுந்தரம் கூறினார். மஇகா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் மற்றும் ஜொகூர் மஇகா தலைவர் திரு ரவின் குமார் கிருஷ்ணசாமி ஆகிய இருவரின் தலைமையின் கீழ் ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் கெமெலா, பெர்லிங், கஹாங் மற்றும் புக்கிட் பத்து ஆகிய நான்கு தொகுதிகளில் கடுமையான பிரச்சாரப் போராட்டங்களுக்கு மத்தியில் நான்கு இடங்களை வென்றுள்ளது. இது ஒரு மகிழ்ச்சியான தருணம் என்று திரு.ராமதாஸ் சுந்தரம் தெரிவித்தார். இந்த வெற்றி வரலாற்றுப்பூர்வமானது. இதன் மூலம் ஜொகூர் மஇகா தனது வலிமையையும் அர்ப்பணிப்பையும் நிரூபித்துள்ளது. திரு ரவின் குமார் கிருஷ்ணசாமியின் தலைமையின் கீழ், இந்திய சமூகம் மஇகா மற்றும் பாரிசான் நேஷனல் அரசாங்கத்திற்குத் தொடர்ந்து ஆதரவு அளிப்பதை உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சிகளும் மேலும் வலுப்படுத்தப்படும் என்று தான் உறுதியாக நம்புவதாக ராமதாஸ் ராமதாஸ் சுந்தரம் சொன்னார். இந்தச் சிறந்த தலைமைத்துவம், சமூகத்திற்குத் தொடர்ந்து முன்னேற்றத்தையும், ஒற்றுமையையும், நல்வாழ்வையும் கொண்டு வரும் என்று நம்புவதாக ராமதாஸ் சுந்தரம் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button