
பெட்டாலிங் ஜெயா மற்றும் பினாங்கில் மஹாசிவராத்திரி கொண்டாட்டம்
பினாங்கு, மார்ச் 21-
பெட்டாலிங் ஜெயா மற்றும் பினாங்கில் மொத்தம் 300 பேர் மஹாசிவராத்திரியை மலேசிய ஈஷா யோகா மையத்தில் கொண்டாட ஒருங்கிணைந்தனர்.
இந்த விசேஷமான மஹாசிவராத்ரியின், ஆழமான சக்திநிலையோடு தம்மை முழுமையாக இணைத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்வில் கோயம்புத்தூர் ஈஷா யோகா மையத்திலிருந்து நேரடி ஒளிபரப்பு நடந்தது, இது மலேசியாவின் உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பானது. பெட்டாலிங் ஜெயா மற்றும் பினாங்கில் நேரடியாக நடைபெற்ற சந்திப்பில், சமுதாயத்தின் பல்வேறு தரப்பினர் மிகுந்த பக்தியோடும் கொண்டாட்டத்துடனும் கலந்து கொண்டனர்

அன்னதானத்தின் புனித பாரம்பரியம்
யோக மரபின் தூய பாரம்பரியமான அன்னதானத்தை கௌரவிக்கும் விதமாக, இந்த இரவு, கலந்துகொண்ட அனைவரும் சாத்விக உணவு வழங்கப்பட்டது.
உண்ணும் உணவின் தூய்மை, உடல், மனதின் தூய்மையாக மாறவேண்டும் என்பதே யோகியர் மரபு!
முழுநீள கொண்டாட்டமான மஹாசிவராத்ரி ஆனந்தம்!
இரவு மெல்ல மலர ஆரம்பிக்க, இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள், கொண்டாட்டத்தை மேலும் உயிரோட்டமாக்கின! புகழ்பெற்ற கலைஞர்கள் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளை வழங்கினர்,
இதில் ஈஷாவின் சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா மற்றும் ஈஷா சம்ஸ்கிருதி ] குழுவினரும் பங்கேற்றனர். சிறப்பம்சமாக, சத்குரு அனைவருக்கும் மஹாமந்திர தியானத்திற்கு தீட்சை அளித்தார்.
இந்த விசேஷமான இரவில், சத்குருவால் அறிமுகப்படுத்தப்பட்ட “மிராக்கில் ஆஃப் தி மைண்ட்” Miracle of the Mind] செயலி வெளியிடபட்டு, மொத்தமாக 10 லட்சத்திற்கும் மேல் பதிவிறக்கங்கள் 15 மணிநேரத்திற்குள் நடந்தது. மேலும் கீழ்கொண்ட நாடுகளில் அதிகம் பதிவிறக்கப்பட்டு பயன்படுத்தியதில் மலேசியா முதல் இடத்திலும், அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஹாங்காங் உட்பட 20 பிற நாடுகளிலும் இந்த இடத்தை பெற்றுள்ளது.
அற்புத மஹாசிவராத்திரி மகிமை!
விடியற்காலை புலர்ந்தவுடன், கூட்டம் குறைந்து, அனைவரும் தங்கள் வீட்டுகளுக்கு அல்லது வேலைகளுக்கு திரும்பத் தொடங்கினர். ஆனால், இரவு முழுவதும் விழித்திருந்த போதிலும், அவர்கள் அனைவரும் புத்துணர்வுடனும், மகிழ்ச்சியுடனும், உயிரோட்டமாகவும் இருந்தனர். இதுவே மஹாசிவராத்திரியின் அற்புத மகிமை!
மரியாதைக்குரிய மேற்கோள்கள்
“PJ ஈஷா மையத்தில் அணைத்து வயதிற்குப்பட்டவரும் மற்றும் அநேக சமூகத்திலிருந்தும் மக்கள் ஒன்றாக கலந்து கொண்டதை காண மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நடனம், தியானம் மற்றும் பல்வேறு அனுபவங்களுடன் அனைவரும் விழித்து இருந்தது உண்மையிலேயே ஒரு சிறப்பான கொண்டாட்டமாக அமைந்தது.
இது மையத்தை முதன்முறையாக வருகைதருபவர்களுக்கு உள்ளூர்க் கோர்ஸ்கள் courses மற்றும் ஈஷா லைஃப் ஸ்டோரையும் Isha Life அறிமுகப்படுத்த ஒரு நல்ல சந்தர்ப்பமாக இருந்தது.”
இதனிடையே பத்மாசெல்வி பரமராஜா, ஈஷா தொண்டர் மற்றும் ஒருங்கிணைப்பாளர், மலேசியா பேசுகையில்
“இந்த ஆண்டு மலேசியா ஈஷா யோகா மையத்தில் முதன்முறையாக மஹாசிவராத்திரியை நண்பர்களுடன் மற்றும் தியானிகளுடன் கொண்டாடினேன். ஏற்பாடுகளுக்காக ஆவலாக செயல்பட்டாலும், சில நேரங்களில் தூக்கத்தின் தாக்கமும், ஒருசில மிக்க ஆழமான தருணங்களும் இருந்தன. அதனால், இந்த இரவை இணைந்து கொண்டாடுவது ஒரு மனதோட்டமான அனுபவமாக அமைந்தது என்றார.



