
மலேசியா இந்திய மாணவர்கள் உலக அரங்கில் சாதனை!
ஜொகூர்,அக்.10 – இரு சிறந்த இளம் புதுமையாளர்கள் — கீர்த்திகா, செலேசா ஜெயா இடைநிலைப் பள்ளி, மேற்பார்வையாளர் பேரரசி மூக்கன், மற்றும் ஜெயேஷ், ராம் முத்து குமாரன், ஜொகூர் ரினி தோட்ட தமிழ் பள்ளி, மேற்பார்வையாளர் யோகேஸ்வர், ஆகியோர் தங்களின் குறிப்பிடத்தக்க சாதனைகளால் மலேசியாவுக்கு சர்வதேச அரங்கில் பெருமை சேர்த்துள்ளனர். MILSET – ESI 2025, அபுதாபி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நகரில் 27 செப்டம்பர் முதல் 3 அக்டோபர் 2025 வரை நடைபெற்றது. இதில், இருவரும் தங்களின் சிறந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப புதுமைத் திட்டங்கள் மூலம் உலகளாவிய அங்கீகாரம் பெற்றனர். இந்த புகழ்பெற்ற போட்டியில் 45 நாடுகளைச் சேர்ந்த இளம் விஞ்ஞானிகள் கலந்து கொண்டு, 1,500-க்கும் மேற்பட்ட புதுமைத் திட்டங்கள் மூலம் உலக சவால்களுக்கு தீர்வு காணும் திறமையை வெளிப்படுத்தினர். மலேசிய மாணவர்களின் பங்கேற்பு Malaysia Young Scientists Organisation (MYSO) அமைப்பின் தலைமையில் நடைபெற்றது. இவ்வமைப்பு இளம் தலைமுறையினரை அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) துறைகளில் உலகளவில் முன்னேற்றம் காண ஊக்குவித்து வருகின்றது.
கீர்த்திகா (செலேசா ஜெயா இடைநிலைப் பள்ளி)
1. தங்கப் பதக்கம் (Gold Award)
2. சிறந்த சமூக தாக்கம் விருது (Best Community Impact Award)
3. நிலைத்த தீர்வு விருது (Sustainable Solution Award)
ஜெயேஷ் ராம் முத்து குமாரன் (ஜொகூர் ரினி தோட்ட தமிழ் பள்ளி)
1. தங்கப் பதக்கம் (Gold Award)
2. நிலைத்த தீர்வு விருது (Sustainable Solution Award)
3. சிறந்த புதுமை விருது (Best Innovation Award)
இவ்விரு மாணவர்களும் தங்களின் தனிப்பட்ட புதுமைத் திட்டங்களுக்காக இந்த விருதுகளைப் பெற்றுள்ளனர். இத்திட்டங்கள் படைப்பாற்றல், சிக்கல் தீர்க்கும் திறன், மற்றும் சமூக நலனும் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் ஆகிய துறைகளில் சிறப்பாக விளங்கியவையாகும். அவர்களின் அசாதாரண சாதனையை அங்கீகரித்து, அவர்களை Afro-Asian Innovation Competition இல் தங்கள் திட்டங்களை மலாயா பல்கலைக்கழகத்தில், 2025 அக்டோபர் 17–18 நாட்களில் அறிமுகப்படுத்த சிறப்பு அழைப்பை பெற்றுள்ளனர். இந்த சாதனை, மலேசிய மாணவர்களின் STEM மற்றும் உலகளாவிய புதுமைத் திறனை வெளிப்படுத்துவதோடு, அவர்களின் பள்ளிகள், MYSO மற்றும் மலேசியா முழுவதற்கும் பெருமை சேர்த்துள்ளது. ஜொகூர் மநிலா கல்வி இலாகா பாலர் பள்ளி மற்றும் தமிழ் பள்ளிகளின் உதவி இயக்குனர் மரியாதைக்குரிய திரு ரவிச்சந்திரன் ராமச்சந்திரன், இவ்விரு மாணவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார். மாணவர்களின் வெற்றிக்காக வழிகாட்டிய பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மற்றும் பெற்றோர்-ஆசிரியர் சங்கம், ரினி தோட்டா தமிழ் பள்ளி PIBG பிரதிநிதி திரு. பிரகாஷ் அவர்களுக்கு, மாணவர்களின் வெற்றிக்காக அளித்த சிறப்பான பங்களிப்பு மற்றும் உறுதியான ஆதரவிற்காக இதயப்பூர்வ நன்றிகள் தெரிவிக்கப்படுகின்றன.



