
Malaysia
முன் அனுமதி இல்லாமல் போலிஸ் சாவடியை ஏற்ப்படுத்தி போலிசாரை வர சொல்வதா?
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
ஈப்போ, செப்-9
போலிஸ் துறையின் ஒப்புதல் பெறாமல்
போலிஸ் சாவடியை ஏற்ப்படுத்தி போலிசார் பாதுகாப்பு கொடுக்க சொல்லும்
எந்தவொரு ஏற்ப்பாட்டிற்கும் போலிஸ் துறை விருட்டென செயல்ப்படாது என
பேராக் போலிஸ் தலைவர் டத்தோ அஜிசி மாட் ஹாரிஸ்
தெரிவித்தார்.
போலிஸ் சாவடியை திறந்து
அதற்கு போலிஸ்காரரை
பணியில் அமர்த்த
சொல்லும் தனி நபர் அல்லது நிறுவனங்களின்
அழைப்புக்கு போலிஸ் துறை சீர்தூக்கி பார்க்க
வேண்டியுள்ளது என்றார்.
சுங்கை சிப்புட் பாவோங் பூர்வ குடியினர் கிராமத்தில் போலிஸ் சாவடி ஓராண்டு முன்பு ஏற்ப்படுத்தி அதற்கு போலிஸ் காரரை பணியில்
அமர்த்த சொல்லும்
வேண்டுகோளை
முன்னிருத்தி கேட்கப்பட்ட கேள்விற்க்கு அவர்
பதிலளித்தார்.



