
மித்ரா மானியத்தை மனு செய்வதற்கான விளக்கமளிக்கும் கூட்டம். 167 இந்திய தனியார் பாலர்பள்ளிகளுக்கு மித்ரா முழுமையான ஆதரவு.
மித்ரா மானியத்தை மனு செய்வதற்கான விளக்கமளிக்கும் கூட்டம்.
167 இந்திய தனியார் பாலர்பள்ளிகளுக்கு மித்ரா முழுமையான ஆதரவு.
ஈப்போ, செப்.25-
மித்ரா மானியத்தை எவ்வாறு மனு செய்வது மற்றும் இதர விதிமுறைகள் குறித்து இங்குள்ள பேராக் மாநில செயலகத்தின் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் விளக்கமளிக்கப்பட்டது. இதன் வாயிலாக அக்டோபர் 15 தொடங்கி நவம்பர் 14 க்குள் விண்ணப்பம் செய்யும்படி மித்ரா செயற்குழு தலைவர் பிரபாகரன் பரமேஸ்வரன் கூறினார்.
கடந்தாண்டில் 72 நாடாளுமன்ற தொகுதிகளில் அதாவது அதிகமான இந்தியர்கள் உள்ள தொகுதிகளுக்கு மானியத்தை மித்ரா வழங்கியது. அந்த மானியங்கள் அத்தொகுதிகளில் வசிக்கும் பி40 இந்தியர்களின் தேவையை பூர்த்தி செய்யப்பட்டது. ஆனால், இவ்வாண்டு அத்திட்டத்திற்கு பிரதமர் அனுமதி வழங்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
தற்போது இந்நாட்டிலுள்ள 167 இந்திய பாலர்பள்ளிகளுக்…



