
Malaysia
தமிழ்ப்பள்ளி மாணவர்களிடத்தில் செயற்க்கை நுண்ணறிவு தகவல் சேர்ப்பு
தேசம் செய்திகள் சாரா
துரோனோ, மார்ச் 16-
அறிவியல் துறையில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்த இருக்கும் செயற்க்கை நுண்ணறிவு தகவல்களை நமது தமிழ்ப்பள்ளி மாணவ செல்வங்களிடத்தில் சேர்க்கும் அவசியம் உருவாகியுள்ளதாக பத்துகாஜா நாடாளமன்ற உறுப்பினர் சிவகுமார் வரதராஜுலு கவனத்திற்கு எடுத்து வந்தார்.
துரோனோ மலேசிய இளைஞர் மேம்பாட்டு அகடாமியில்
ஏற்பாடு செய்த தமிழ்ப்பள்ளி ஆசிரியர் ஆசிரியைகளுக்கான செயற்க்கை நுண்ணறிவு விளக்க கூட்டத்தில் உரையாற்றுகையில் மாணவ செல்வங்களிடம் இந்த தகவலை சேர்த்து அதற்கு இப்போதே தயார் செய்ய கேட்டு கொண்டார்.
பத்துகாஜா நாடாளமன்ற தொகுதி சேவை மையம் ஏற்பாடு செய்த நிகழ்வில் 32 ஆசிரியர் ஆசிரியைகள் பங்கு கொண்டனர்.



