Malaysia

அதிகரிக்கும் இணையக் குற்றங்கள் MCMC தகவல் தரவுகளைப் பாதுகாப்பது குறித்துப் பொது மக்களிடம் கருத்துகள் கோரும் 

அதிகரிக்கும் இணையக் குற்றங்கள் MCMC தகவல் தரவுகளைப் பாதுகாப்பது குறித்துப் பொது மக்களிடம் கருத்துகள் கோரும்

 

சைபர்ஜெயா, ஜூலை 25-

நாடு தழுவிய நிலையில் சில ஆண்டுகளாக இணைய மோசடிகள், நிதி மோசடிகள் மற்றும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்வதும், சட்ட அமலாக்க முயற்சிகளை ஆதரிப்பது ஆகியவை முக்கியமானதாக மாறியுள்ளது.

 

இதைக் கருத்தில்கொண்டு, மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC ஆராய்ச்சி நோக்கங்களுக்காகத் தகவல் தரவுகளைத் தக்கவைத்து, பாதுகாத்து, வெளியிடுவது குறித்த ஒரு பொது ஆலோசனைக் கூட்டத்தை நடத்தவிருக்கிறது.

 

சட்ட அமலாக்க அதிகாரிகள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களில் ஒன்று, துரிதமாகவும் திறம்படவும் செயல்படுவதற்குத் தேவையான துல்லியமான தகவல் தரவுகளை சரியான நேரத்தில் பெறுவதை உறுதி செய்வதாகும். இந்த பொது ஆலோசனைக் கூட்டத்தின் முக்கிய நோக்கம், பொது நலனை சமநிலைப்படுத்தியவாறு, விசாரணைத் தேவைகளை ஆதரிக்கத் தகவல் தரவுகளை எவ்வாறு தக்கவைத்து, பாதுகாத்து, வெளிப்படுத்த வேண்டும் என்பது குறித்துத் தொடர்புடைய பங்குதாரர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதாகும்.

 

MCMC, பொதுமக்கள், தொழில்துறை மற்றும் பிற ஆர்வமுள்ள தரப்பினரை இந்த பொது ஆலோசனைக் கூட்டப் பத்திரிகை குறித்துத் தங்கள் கருத்துக்களைச் சமர்ப்பிக்குமாறு அழைக்கிறது. எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்புகளை ஆகஸ்ட் 8, 2025 வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணிக்குள் MCMC-க்கு அஞ்சல் மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது மைக்ரோசாஃப்ட் படிவங்கள் மூலமாகவோ அனுப்பலாம்.

 

முகவரி

The Chairman

Malaysian Communications and Multimedia Commission

MCMC HQ Tower 1, Jalan Impact, Cyber 6, 63000 Cyberjaya

Selangor Darul Ehsan

மின்னஞ்சல்:policy.development@mcmc.gov.my

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button