PMX - Datuk Seri Anwar IbrahimMalaysia

இளைஞர்களைப் இணையத்தில் பாதுகாக்க, அரசின் முயற்சியை பிபிபி வரவேற்கிறது! டத்தோ லோக பாலா மோகன் கருத்து.

கோலாலம்பூர், டிச. 7-16 வயதிற்கு உட்பட்ட நபர்கள் அடுத்த ஆண்டு முதல் சமூக ஊடக தளங்களுக்கு அணுகுவதைத் தடை செய்வதாக அரசாங்கம் அறிவித்த முடிவை மக்கள் முற்போக்கு கட்சி (பிபிபி) வரவேற்கிறது என்று பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோக பாலா மோகன் கூறினார்.  இந்த துணிச்சலான முயற்சியை ஆன்லைன் பாதுகாப்பு சட்டம் 2025 (சட்டம் 866) கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட “தேவையான மற்றும் காலத்திற்குத் தக்க நடவடிக்கை” என டத்தோ லோக பாலா மோகன் வர்ணித்தார். “இன்றைய டிஜிட்டல் காலத்தில் சமூக ஊடகம் இளைஞர்களின் வாழ்க்கையின் தவிர்க்க முடியாத பகுதியாக மாறியுள்ள நிலையில், இந்த ஒழுங்குவிதி குழந்தைகளை இணையத்தளத்திலிருந்து வரும் மிரட்டல், ஒழுங்குக்கேடான உள்ளடக்கம், மோசடி, மற்றும் இனைய மோசடி ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பது மிகவும் முக்கியமானதாகும்,” என்று லோக பாலா மோகன் தெரிவித்தார். இந்நடவடிக்கை இளம் மலேசியர்களின் நலன், கல்வி மற்றும் பாதுகாப்பிற்கான பிபிபி யின் நீண்டகால போராட்டமாகும். இணையத்தின் இருண்ட பக்கத்திலிருந்து இளைஞர்களை பாதுகாக்கும் தேசிய முயற்சியின் ஒரு பகுதியாக இந்தத் தடை அமையும் என்றும், பெற்றோர், கல்வியாளர்கள் மற்றும் தளப் பொறுப்பாளர்கள் அனைவரும் இணைந்து பாதுகாப்பான இனைய சூழலை உருவாக்குவது அவசியம். புதிய ஒழுங்குவிதி, இன்னும் முழுமையான முதிர்ச்சி அல்லது டிஜிட்டல் விழிப்புணர்வு வளராமல் இருக்கும் சிறார்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. .குழந்தைகளின் டிஜிட்டல் நலனை பாதுகாப்பது ஒழுங்குபடுத்துநர்கள், சேவை வழங்குநர்கள், பெற்றோர் மற்றும் சமூகங்கள் ஆகியோரின் கூட்டு பொறுப்பாக இருக்க வேண்டும் என்றும் பிபிபி நம்புகிறது. குறிப்பாக பெற்றோர் கண்காணிப்பு குறைவாக இருக்கும் குடும்பங்களுக்கு, இந்த ஒழுங்குவிதி ஒரு வலுவான அடிப்படை பாதுகாப்பை வழங்குகிறது. அதே சமயம், சமூக ஊடக தளங்கள், இணைய சேவை வழங்குநர்கள் மற்றும் டிஜிட்டல் கட்டுப்பாட்டு அமைப்புகள் இந்த புதிய விதிகளை மனப்பூர்வமாகவும் வெளிப்படையாகவும் அமல்படுத்த வேண்டும் என டாக்டர் லோக பாலா மோகன் அழைப்பு விடுத்தார்.  பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி டிஜிட்டல் கல்வியறிவு மேம்படுத்தவும், ஆரோக்கியமான இணைய பழக்கங்களை ஊக்குவிக்கவும் உதவ வேண்டும். தேசிய அளவில் குழந்தை பாதுகாப்பு கொள்கைகளை வலுப்படுத்தவும், சமூக மட்ட கல்வி மற்றும் ஆதரவு திட்டங்களை மேம்படுத்தவும் பிபிபி தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளும் என்றும் அவர் வலியுறுத்தினார். “நாங்கள் தயாராக இருக்கிறோம்,” “இது வெறும் தடையைப் பற்றியது அல்ல; அடுத்த தலைமுறைக்காக பாதுகாப்பான, பொறுப்பான டிஜிட்டல் சூழலை உருவாக்குவதற்கான ஒரு முயற்சி” என்று டத்தோ லோக பாலா மோகன் உறுதியளித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button