
கருவறையில் தொடங்கும் அறிவார்ந்த பெற்றோரியல் நூல் மக்கள் படிக்க வேண்டிய நூல் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமையில் நூல் வெளியீட்டு விழா
கோலாலம்பூர், ஜூன் 6-
‘சிந்தனைக்கு ஒரு நிகழ்வு’ எனும் தலைப்பில் 32 உண்மைச் சம்பவங்களை மையமாக கொண்டு வெளியீடு காணவுள்ள “கருவறையில் தொடங்கும் அறிவார்ந்த பெற்றோரியல்” எனும் நூல் ஜூன் 23 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு ம.இ.கா தலைமையகம் நேதாஜி மண்டபத்தில் வெளியீடு காணவுள்ளதாக அதன் எழுத்தாளர் கே.ஏ.குணா கூறினார்.
‘கருவறையில் தொடங்கும் அறிவார்ந்த பெற்றோரியல்’்நூல் வெளியீட்டு விழா ம.இ.கா தேசிய தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தலைமையில் ம.இ.கா நேதாஜி மண்டபத்தில் நடைபெறும் என்று குணா தெரிவித்தார்.
இந்த நூலில் பெற்றோரியல் அணுகுமுறைகளுக்கு உரமூட்டுவதுடன், வாசகர்களின் சிந்தனையைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது.
இடைநிலைப்பள்ளி மாணவர்கள், தனிநபர்கள்; திருமணம் புரியவிருப்பவர்கள்; தம்பதியர்; பெற்றோர்கள்; தாத்தா-பாட்டி; ஆசிரியர்கள்; பல்துறையைச் சேர்ந்த நிபுணர்கள், மற்றும் குடும்ப உறுப்பினர்கள் , என அனைவரும் வாசிக்க வேண்டிய நூல்
‘கருவறையில் தொடங்கும் அறிவார்ந்த பெற்றோரியல்’்நூல் என்று குணா சொன்னார்.
‘கருவறையில் தொடங்கும் அறிவார்ந்த பெற்றோரியல்’ எனும் இந்நூலில் அறிவியல் ஆய்வுகள் உணர்ந்தும் உளவியல் உண்மையின் அடிப்படையில் குழந்தை வளர்ப்பு அணுகுமுறைகள் எழுதப்பட்டுள்ளன.
பிள்ளைகளின் கல்வியில் அக்கறை செலுத்திவரும் பெற்றோர் , தங்கள் பிள்ளைகளின் மன உணர்வுகளையும் மனநலத்தையும் பற்றி அறிந்திருப்பதில்லை.
வளரும் தங்கள் பிள்ளைகளின் நடத்தையில் முரண்பாடு ஏற்படும்போது , பெற்றோர்களுக்கு மனக்கவலையுடன் பயமும் பதற்றமும் ஏற்படுகின்றது.
இதற்கான காரணிகளைத் தெளிவுற விளக்கத்துடன் விவரித்து, அதற்கான ஆலோசனையையும் இந்நூல் பரிந்துரைக்கின்றது.
ஆகையால், இந்நூல் வெளியீட்டு விழாவில் அணிதிரண்டு கலந்து கொள்ளும்படி கே.ஏ.குணா கேட்டுக் கொண்டார்.
தொடர்புக்கு கே.ஏ.குணா -012-2591632
பாரி-016-6554681




