Malaysia

நெகிழி மற்றும் மின்னியல் கழிவுகள் கொட்டும் இடமாக ம்லேசியா திகழ்கின்றது கழிவு கடத்தலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் பூவுலகின் நண்பர்கள் இயக்கம் வேண்டுகோள்

பினாங்கு,ஜூன் 27- சிலாங்கூர் மாநில சுற்றுச்சூழல் இலாகா வெஸ்போர்ட் துறைமுகத்தில், கழிவுகள் நிரப்பப்பட்ட 18 கொள்கலன்களயும்,நெகிழி கழிவுகள் மற்றும் பிற குப்பைகள் அடங்கிய 11 கொள்கலன்களையும் இருப்பதை உறுதி செய்தது.

வளரும் நாடுகளில் பணக்கார தொழில்மயமான நாடுகள் நச்சுக் கழிவுகளை கொட்டுவதைத் தடுக்கும் உலகளாவிய கண்காணிப்புக் குழுவான சியாட்டிலை தளமாகக் கொண்ட பேன் என்ற அமைப்பின் மூலம் விரிவான எச்சரிக்கைகளைப் பெற்ற பிறகு, மலேசிய அரசாங்கம் 301 பேரை கைது செய்ததாக அறிவித்தது.

453 கொள்கலன்களில் இந்த அமைப்பு ஆய்வு நடத்தியது என பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் மகேஸ்வரி சங்கரலிங்கம் தெரிவித்தார்.

இதில், 106ல் சட்டவிரோத மின்னணு கழிவுகள் இருப்பது கண்டறியப்பட்டது.
மலேசியாவின் கிள்ளான் நகரில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில், சுற்றுச்சூழல் அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மத், ஒத்துழைப்பை வழங்கிய பேன் அமைப்புக்கு பாராட்டு தெரிவித்தார்.

மேலும் 200 கொள்கலன்கள் திறக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட உள்ளன என்று குறிப்பிட்டார்.

2002 ஆம் ஆண்டு முதல் மின்-கழிவு கடத்தல் பிரச்சினையில் பேன் அமைப்பு தீவிரம் காட்டி வருவதாக இந்த அமைப்பின் மலேசிய உறுப்பினராக இருக்கும் பூவுலகின் நண்பர்கள் இயக்கம் தீவிரமாக மின்னியல் கழிவுகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருவதாக மகேஸ்வரி தெரிவித்தார்.

வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பானிலிருந்து சீனாவிற்கு ஒரு பெரிய ஏற்றுமதி பாதை இருப்பதை முதன்முதலில் வெளிப்படுத்தினர்.

அங்கு கணினிகள், பிரிண்டர்கள் மற்றும் பிற மின்னியல் கழிவுகள் ஏற்றுமதி செய்யபடுகின்றன.

அமிலங்களால் சுத்தப்படுத்தப்பட்டு, அதிக மாசுபடுத்தும் செயல்பாடுகளில் இவை அழிக்கப்படுகிறது.

அப்போதிருந்தே பேன் அமைப்பு மின்-கழிவு நெருக்கடிக்கு உலகளாவிய கவனத்தை ஈர்த்தது.

மின் கழிவுகள் போன்ற அபாயகரமான அல்லது பிரச்சனைக்குரிய கழிவுகளின் வர்த்தகத்தை கண்டிப்பாக கட்டுப்படுத்த வேண்டும்.

சீனாவின் பிரதான நிலப்பகுதி மற்றும் பின்னர் ஹாங்காங், மின்-கழிவு இறக்குமதியை தடை செய்வதது.

மலேசிய அரசாங்கத்திற்கு உயர்தர அமலாக்க உளவுத்துறையுடன் உதவுவதற்கான வாய்ப்பை நாங்கள் வரவேற்கிறோம் என்றார் அவர்.

எனவே அவர்கள் இந்த ஏற்றுமதிகளைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் உட்பட மற்றவர்களையும் கைது செய்ய வேண்டும்.

அமெரிக்க அரசாங்கம் இந்த கொள்கலன்களை திரும்பப் பெறுவதையும் உறுதி செய்ய வேண்டும். அமெரிக்க ஏற்றுமதியாளர்கள் மீது வழக்குத் தொடரும் பணி முக்கியமான ஒன்றாகும்.

ஆனால் பேசல் உடன்படிக்கையை அங்கீகரிக்காத உலகின் மிகச் சில நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று என்பதால் இது கடினமானது.

அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகளில் இருந்து வரும் நெகிழி மற்றும் மின்னியல் கழிவுகளை கொட்டும் இடமாக மலேசியா பெருகி வருவதை கண்டு பூவுலகின் நண்பர்கள் இயக்கம் கவலை கொள்கிறது.

ஆகவே தேசிய மற்றும் சர்வதேச அளவில் அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து கழிவு கடத்தலை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அமலாக்க துறைக்கு நாங்கள் பாராட்டுகின்றோம்.

அதே நேரத்தில்
சாத்தியமான ஊழலுக்கு எதிராக விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
குப்பை கொள்கலன்கள் திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்றும் மகேஸ்வரி கேட்டுக் கொண்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button