
பெஸ்தாரி ஜெயாவில் கவிமாறனின் “இலக்கை நோக்கி” எனும் கருத்தரங்கம் நடைபெற்றது
பெஸ்தாரி ஜெயா,பிப்.8-
Kuala Selangor, Bestari Jaya தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் தலைமையாசிரியர் திரு.எஸ்.எஸ் பாண்டியன் அவர்களின் ஆதரவோடு கவிமாறனின் “இலக்கை நோக்கி” எனும் மாணவர்களுக்கு இடையில் கருத்தரங்கம் இனிதே நடைபெற்றது.

கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி வியாழக்கிழமை Kuala Selangor Bestari Jaya தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் நடைபெற்ற “இலக்கை நோக்கி” எனும் மாணவர்கள் கருத்தரங்கு, கலந்துரையாடல் நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் குறிப்பாக கோலாசிலாங்கூர் வட்டாரத்தில் உள்ள ஆறாம் ஆண்டு தமிழ்ப் பள்ளி மாணவர்கள் சுமார் ஒன்றரை மணி நேரம் பயிற்சியில் கலந்து கொண்டனர். நல்லொழுக்கம், எதிர்கால சிந்தனை, சமுதாய கடப்பாடு, கல்வி மேம்பாடு இப்படி நல்ல விஷயங்கள் மாணவர்களுக்கு பயிற்சியின் வழி போதிக்கப்பட்டது.
பள்ளி ஆசிரியர்களும் இதற்கு சிறப்பான ஒத்துழைப்பை வழங்கினர். திரு.சுந்தர் அவர்கள் உதவிகளை வழங்கினார்.



தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்



