
Malaysia
தீபத் திருநாளை அனைவரும் பாரபட்சம் இல்லாமல் கொண்டாட வேண்டும் -ரேமன் வலியுறுத்து
கிள்ளான்,அக்.8-
இருளை அகற்றி ஒளியை கொண்டு வரும் தீபாவளியை முன்னிட்டு ஓரே நோக்கம் இயக்கம் கிள்ளான் சிறுவர் சமூகநல இல்லத்தின் சிறுவர்களுக்கு தீபாவளி புத்தாடைகளை வழங்கினர்.
அதனுடன், புத்தாடைகளுடன் விருந்துபசரிப்பும் பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டது.
ஆனந்த், ரேமன் ஆகியோர் ஒன்றினைந்து புத்தாடைகளை பரிசளித்தனர்.
இதனிடையே ஒரே நோக்கம் இயக்கம் பொறுப்பாளர் ரேமன் பேசுகையில் , இது எங்களின் 100 ஆவது சமூகப் பணியாகும்.

தீமாவளி போன்ற விழாக்காலங்களில்யாருமே விடுப்படக்கூடாது. அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டு என அவர் கேட்டுக் கொண்டார்.
புத்தாடைகளை பெற்ற சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் ஒரே நோக்கம் இயக்கத்திற்கு நன்றியை தெரிவித்தனர்.



