
ஒரு படைப்பாளிக்குதான் மரணம் அவன் எழுத்துக்கு என்றும் மரணமில்லை டத்தோஸ்ரீ எம்.சரவணன் சூளுரை
கோலாலம்பூர்,நவ.20-
ஒரு படைப்பாளியின் மரணம் என்பது உடலுக்குத்தான். உலகம் இருக்கும் வரை அவரது எழுத்து அவரின் பெயர் சொல்லும் என்று ம.இ.கா தேசிய தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கூறினார்.
ஒரு படைப்பாளிக்குதான் மரணம். அவன் எழுத்துக்கு என்றும் மரணமில்லை என்று
மறைந்த டாக்டர் சரவணன் வீரமுத்துவின் ஆகக் கடைசியான படைப்புகளை வெளியீடு செய்த நிகழ்வில் டத்தோஸ்ரீ சரவணன் அவ்வாறு தெரிவித்தார்.
இந்த நூலை வெளியிட்டதில் மட்டற்ற மகிழ்ச்சி. கல்வியாளரான டாக்டர் சரவணன் மலாய் எழுத்துலகில் ஒரு மிகப் பெரிய ஆளுமை என்பதை இந்த நிகழ்ச்சியின் வழி அறிய முடிந்தது.
ஒருவர் மறைந்த பின்னும் அவர் நினைக்கப் படுவதே உன்னதமான வாழ்க்கை வாழ்ந்ததற்கான அர்த்தம். வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்” என்ற குறளுக்கு பொருத்தமானவர் டாக்டர் சரவணன் வீரமுத்து என்று டத்தோஸ்ரீ சரவணன் புகழாரம் சூட்டினார்.



