Malaysia

இந்தியர்களின் நிலையை மேம்படுத்த 5 நிலைகளில் 11 பரிந்துரைகள் அரசாங்கத்திடம் மகஜர் வழங்கப்பட்டது

இந்தியர்களின் நிலையை மேம்படுத்த 5 நிலைகளில் 11 பரிந்துரைகள்

அரசாங்கத்திடம் மகஜர் வழங்கப்பட்டத

சார்ல்ஸ் சந்தியாகோ தகவல்

 

தேசம் செய்திகள் குணாளன் மணியம்,

ரேவதி குணாளன்,

ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

 

கோலாலம்பூர், ஜூலை 4-

இந்திய சமுதாயத்தின் நிலையை உயர்த்த நாட்டின் 13ஆவது மலேசிய திட்டத்தில் ஐந்து துறைகள் வழி 11 பரிந்துறைகள் முன் வைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ கூறினார்.

 

கல்வி, இளைஞர்-மகளிர் மேம்பாடு, சிறு, குறு, நடுத்தர தொழில் வர்த்தகம், வங்கிகள் சீர்திருத்தம், அரசாங்க வாய்ப்புகள் உள்ளிட்ட 5 நிலைகளில் 11 பரிந்துரைகள் முன் வைக்கப்பட்டுள்ளது. இதில் பொருளாதாரம் ஒரு முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. மேலும் தொழில் திறன் பயிற்சி தொடர்பாகவும் இந்த பரிந்துரைகள் அமைந்துள்ளதாக வியாழக்கிழமை பெட்டாலிங் ஜெயா, ஜாலான் காசிங் மகாராஜா உணவகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சந்திப்பில் சார்ல்ஸ் சந்தியாகோ அவ்வாறு தெரிவித்தார்.

 

கடந்த நான்கு மாதங்களாக நான்கு பயிற்சி பட்டறைகள் நடத்தி ஆய்வுகளை திரட்டினோம். சமுதாயத்தின் கருத்துகளை கேட்டறிந்து அதன் பின்னர் இந்த 11 பரிந்துரைகள் தயாரிக்கப்பட்டது.

 

இந்த பரிந்துரைகள் பொருளாதார அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ நோர் அஸ்மியிடம் ஜூன் 23 ஆம் சமர்ப்பித்து விட்டோம் என்று சார்ல்ஸ் சந்தியாகோ சொன்னார்.

 

மலேசிய இந்திய சமுதாயத்திற்கு ஒரு நிலையான – சமமான வாய்ப்பை உருவாக்க வேண்டும். அதேசமயம் மித்ரா மீதான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். இந்திய பெண்கள் மற்றும் இளைஞர் தலைமையை மீண்டும் தலைமை பொறுப்பை ஏற்ற வேண்டும்.

 

கல்வியை பாதியிலேயே கைவிடும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை பெரும் கவலை அளிக்கிறது.

இதற்கு தீர்வு காண வேண்டும். ஒரு கல்வி கற்ற சமுதாயமாக இந்தியர்கள் இருக்க வேண்டும். இந்திய மாணவர்கள் கல்வியை முழுமையாக முடிக்க வேண்டும். பிறகு அவர்களுக்கு தொழில் திறன் பயிற்சி கல்வி வழங்கப்பட வேண்டும்.

 

இதன் மூலம் அவர்களின் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமையும். அதேசமயம் அனைத்து குழந்தைகளுக்கும் பாலர்பள்ளி கல்வி கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும்.

டிஜிட்டல் வணிக துறை, பசுமை தொழில்நுட்ப துறை, இளம் தொழில் முனைவோர் துறையில் இந்தியர்கள் அதிக அளவில் கால் பதிக்க உதவிட வேண்டும் என்று சார்ல்ஸ் சந்தியாகோ குறிப்பிட்டார்.

 

கல்வி, பொருளாதரத்தில் பின் தங்கி விட்ட இந்திய சமுதாயத்திற்கு உதவிட அரசாங்கம் முன் வர வேண்டும். இந்திய சமுதாய மக்கள் எழுப்பும் பல்வேறு கேள்விகளுக்கு அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும்.

 

மக்கள் தொகையில் 6.1 விழுக்காடாக இருக்கும் இந்திய சமுதாயம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு சிறந்த நிலையில் இருக்க நமது மாணவர்கள், இளைஞர்கள், மகளிர்கள் உருமாற்றம் பெற வேண்டும். குறைந்த மாணவர்களை கொண்டிருக்கும் தமிழ் பள்ளிகள் இந்தியர்கள் அதிகம் வாழும் இடங்களில் இடமாற்றம் செய்வது இந்த பரிந்துரையில் முக்கிய அங்கமாகும்.

 

அதேசமயம் பாலர் பள்ளிகள் இல்லாத தமிழ்ப் பள்ளிகளில் கண்டிப்பாக பாலர் பள்ளிகள் அமைக்கப்பட வேண்டும் என்பதும் இதில் அடங்கும்.

பிரதமர் துறை அமைச்சின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கனுடன் இணைந்து அரசு சார்பற்ற இயக்கம் இந்த பரிந்துரைகள் தயாரிப்பில் பங்கு எடுத்ததாக சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button