Malaysia

வெளிநாட்டிற்கு போதைப்பொருள் கடத்தல் திட்டம் முறியடிப்பு , நால்வர் கைது ! 

தேசம் செய்திகள் கவிஅரசன் அன்பரசன்

மலாக்கா , மே 8-

தாமான் குருபோங் பெர்டானா வீடமைப்பு பகுதியில் நால்வர் கொண்ட கும்பல் வெளிநாட்டிற்கு போதைப்பொருள் கடத்தும் திட்டம் நிறைவேறாமல் போனதை மத்திய மலாக்கா மாவட்ட போலிஸ் தலைவர் துணை கமிஷ்னர் கிறிஸ்டோபர் உறுதிப்படுத்தினார்.

மத்திய மலாக்கா குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட அதிரடி சோதனையில் 19 லிருந்து 50 மதிக்கத்தக்க நால்வர் அடங்கிய கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர்.

வீடொன்றை வாடகை எடுத்து அதில் ஷாபு வகை (10,000 கிராம்) நடப்பு சந்தையில் அதன் விற்கும் விலையானது வெ 320,000 என்றார் கிறிஸ்டோபர்.கடந்த ஜனவரி தொடங்கி இவர்கள் இத்திட்டத்தை சாதூரியமாக வெளிநாட்டிற்கும் பேரம் பேசுவதையும் விசாரணையில் தெரியவந்தது.இவர்கள் அனைவரும் 8 மே வரை தடுப்பு காவலில் செக்‌ஷன் 39பி அபாயகரமான போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக கைது செய்துள்ளதாக கிறிஸ்டோபர் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button