Malaysia

பிரான்ஸ் அதிபர் மேக்ரான் பிரதமர் அன்வாரை மரியாதையுடன் வரவேற்றார்

பிரான்ஸ் அதிபர் மேக்ரான் பிரதமர் அன்வாரை மரியாதையுடன் வரவேற்றார

பாரிஸ், ஜூலை 6- மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், பிரான்சுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அவரைப் பாரிஸில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க எலிசி அரண்மனையில் (Istana Elysee) முழு மரியாதையுடன் வரவேற்றார்.

இந்தச் சந்திப்பு, மலேசியாவுக்கும் பிரான்சுக்கும் இடையிலான நெருங்கிய மற்றும் பரஸ்பர மரியாதைக்குரிய உறவைப் பிரதிபலிக்கும் ஒரு முக்கிய நிகழ்வாக அமைந்தது.

பிரதமர் அன்வார் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் இந்த உத்தியோகபூர்வ வரவேற்பு தொடர்பான புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டார்.

இருநாட்டுத் தலைவர்களும் இருதரப்பு உறவுகள் குறித்து ஆழமான பேச்சுவார்த்தை நடத்தினர். வர்த்தகம், முதலீடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, குறைக்கடத்திகள் (semiconductors), பாதுகாப்பு, கல்வி, டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற பல்வேறு முக்கியத் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல் குறித்தும், குறிப்பாக காசாவில் நிலவும் மனிதாபிமான நெருக்கடி குறித்தும் பிரதமர் அன்வார் இந்தச் சந்திப்பில் முக்கியமாக எடுத்துரைத்தார்.

காசாவில் உடனடி போர் நிறுத்தம் மற்றும் மனிதாபிமான உதவிகள் வழங்குவது குறித்து மலேசியாவும் பிரான்சும் உடன்பாடு எட்டியுள்ளன.

இந்த விஜயம், ஏர்பஸ் விமானக் கொள்முதல் ஒப்பந்தம் மற்றும் முக்கிய பிரெஞ்சு நிறுவனங்களுடனான சந்திப்புகள் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்களைக் கொண்டிருந்தது. பிரதமரின் இந்த விஜயம், மலேசியா-பிரான்ஸ் உறவுகளில் அனைத்துத் துறைகளிலும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் வெற்றி பெற்றுள்ளதாக அதிபர் மேக்ரான் குறிப்பிட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button