
Malaysia
நாட்டின் சுதந்திர தினம் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 100 வெள்ளி சாரா உதவி தொகை! பிரதமர் அன்வார் அறிவிப்பு
நாட்டின் சுதந்திர தினம்
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 100 வெள்ளி சாரா உதவி தொகை!
பிரதமர் அன்வார் அறிவிப்ப
புத்ரா ஜெயா, ஜூலை 23-
நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு 18 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு 100 வெள்ளி சாரா உதவி தொகை வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
இந்த 100 வெள்ளி உதவித் தொகை நேரடியாக மக்களின் அடையாள அட்டைகளில் செலுத்தப்படும் என்று பிரதமர் அன்வார் தெரிவித்தார்.
இந்த உதவித்தொகை எதிர்வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை மைடின், லோட்டஸ், எக்கோன் சேவ், 99 ஸ்பீட் மார்ட் கடைகளில் மளிகை பொருட்களை வாங்கி கொள்ளலாம்.
நூறு ரிங்கிட் தேவை இல்லை என்று நினைப்பவர்களின் உதவித் தொகை மீட்டுக் கொள்ளப்படும் என்று பிரதமர் அன்வார் சொன்னார்.



