Malaysia

மலேசியர்கள் வியாபாரம், கல்வி இரண்டிலும் சாதிக்க வேண்டும்  இதுதான் அமானா இக்தியாரின் நோக்கம்…

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவுக் கழக துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் கருத்து

கோலாலம்பூர், ஜன.29-

மலேசியர்கள் வியாபாரத்துடன் கல்வியிலும் சாதிக்க வேண்டும் என்பதுதான் அமானா இக்தியாரின் முக்கிய நோக்கமாக உள்ளது என்று தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவுக் கழக துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.

இந்தியர்கள் அமானா இக்தியாரில் உள்ள வாய்ப்புகளை முறையாக பயன்படுத்திக் கொள்ள் வேண்டும். இந்த ஆண்டு 2.6 பில்லியன் ரிங்கிட் நிதியை மொத்தம் 320,000 பங்கேற்பாளர்களுக்கு வழங்கிவதை அமானா இக்தியார் இலக்காக கொண்டுள்ளது என்று அமானா இக்தியார் தலைமையகத்திற்கு வருகை மேற்கொண்ட போது டத்தோ ரமணன் இதனை தெரிவித்தார்.

அமானா இக்தியார் தலைமையகத்திற்கு சிறப்பு வருகை மேற்கொண்டேன். அப்போது அமானா இக்தியாரில் உள்ள கடனுதவித் திட்டங்கள் குறித்து எனக்கு முழுமையாக விளக்கம் தரப்பட்டது. குறிப்பாக அமானா இக்தியாரின் வாயிலாக அதிகமான பெண்களே பயன்பெற்றுள்ளர்.

கடனுதவி பெறும் அவர்கள் அதை முறையாக திருப்பி செலுத்துவது தான் அதற்கான முக்கிய காரணமாக உள்ளது.

இந்த ஆண்டு இன்னும் அதிகமானோருக்கு கடனுதவிகளை வழங்கவும் அமானா இக்தியார் திட்டமிட்டுள்ளது என்று டத்தோ ரமணன் சொன்னார்.

இதனிடையே அமானா இக்தியார் மலேசியா மேற்கொண்டுள்ள பிரத்தியேக டியூஷன் வகுப்பு (டியூஷன்) திட்டம் மிகவும் மகத்தானது. அதிலும் குறிப்பாக அமானா இக்தியார் தனது உறுப்பினர்களின் பிள்ளைகளுக்காக சிறப்பு பிரத்தியேக வகுப்புகளை வழங்குகிறது என்று டத்தோ ரமணன் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் கூடுதலாக 100 மில்லியன் ரிங்கிட்டை அமானா இக்தியாருக்காக ஒதுக்கினார். அந்த வகையில் இவ்வாண்டு புதியதாக 20,000 உறுப்பினர்களுக்கு அமானா இக்தியார் உதவ முடியும். எதிர்வரும் மார்ச் மாதம் முதல் இந்த கூடுதல் நிதிக்கான விண்ணப்பங்கள் திறக்கப்படும் என்று அமானா இக்தியார் தலைமை இயக்குநர் முகமட் ஷமிர் அஜிஸ் கூறினார்.

தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button