
Malaysia
கோல குபு பாரு இடைத்தேர்தல் இரவு10 மணிக்கு முடிவுகள் தெரியவரும்
உலுசிலாங்கூர், மே 11-
கோல குபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான முடிவு இரவு 10 மணிக்கு தெரியவும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அறியப்படுகிறது.
இந்த கோல குபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்களிப்பு சுமூகமாக நடைபெற்று வரும் வேளையில் இதற்கான முடிவுகள் இரவு 10 மணிக்குள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலை முன்னிட்டு மொத்தம் 18 வாக்கு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த வாக்களிப்பு காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவு பெறவுள்ளது. இரவு 10 மணிக்குள் முடிவுகள் அறிவிக்கப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன.



