Malaysia

மலேசிய இந்து சங்கம் பலம் பொருந்திய அமைப்பாக உருமாற வேண்டும் அப்போதுதான் இந்துக்கள் தொடர்பான கோரிக்கைகளை அரசு செவிமடுக்கும் டத்தோஸ்ரீ எம்.சரவணன் வேண்டுகோள்

 

கோலாலம்பூர்,ஜூலை 21-
மலேசிய இந்துகள் விவகாரம் என்றால் அதற்கு மலேசிய இந்து சங்கம்தான் பிரதிநிதி என்ற நிலை உருவாக வேண்டும் என்று மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் வலியுறுத்தியுள்ளார்.

மஇகாவுக்கு அடுத்த மிகப் பெரிய சங்கமாக மலேசிய இந்து சங்கம் விளங்குகிறது. ஆகையால், மலேசிய இந்துக்கள் தொடர்பான கோரிக்கைகளை அரசு செவிமடுக்கும் சக்தியை மலேசிய இந்து சங்கம் கொண்டிருக்க வேண்டும் என்று மலேசிய இந்து சங்கத்தின் ஆண்டு கூட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் டத்தோஸ்ரீ எம்.சரவணன் அவ்வாறு கூறினார்.

மலேசிய இந்து இச்சங்கத்தில் பல லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால், இச்சங்கத்தின் பலமும் ஆற்றலும் அரசுக்கு புரிவது இல்லை. இந்து சங்கத்தின் பலத்தையும் ஆற்றலையும் அரசுக்கு புரிய வைக்க வேண்டும் என்று டத்தோஸ்ரீ எம்.சரவணன் கேட்டுக் கொண்டார்.

நாட்டில் அதிகமான இந்திய மாணவர்களின் கல்விக்கு உதவி வழங்கியது மஇகா தான். ஆனால், நேற்று மழைக்கு முளைத்தவர்கள் எல்லாம் மஇகா என்ன செய்தது என்று கேள்வி எழுப்புகின்றனர்.

இதற்கு முறையாக ஆவணங்களும் பதிவுகளும் இல்லாததே காரணம். மஇகா செய்த தவற்றை மலேசிய இந்து சங்கம் செய்யக் கூடாது. நாட்டில் அதிகமான மாணவர்கள் திருமுறை படிப்பதற்கும் இந்து சமயத்தை பாதுகாப்பதற்கும் இந்து சங்கம்தான் காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இந்து சங்கம் என்ன செய்தது என்று கேட்பவர்கள் சங்கத்திற்கு எதையும் செய்திருக்க மாட்டார்கள் என்பதால்
எத்தனை மாணவர்கள் பயன் பெற்றனர் என்பதை இந்து சங்கம் முறையாக பதிவு செய்து வைக்க வேண்டும். இந்த பதிவுகள் அவர்களின் வாயை அடைக்கும்
என்று டத்தோஸ்ரீ சரவணன் மேலும் சொன்னார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button