
உயர்கல்வி நிறுவனங்களில் கல்வியைத் தொடர 500 வெள்ளி ஊக்கத்தொகை -பாங்கி தொகுதி சமூக சேவை மையம் அழைப்பு
ஷா ஆலம், ஆகஸ்ட் 6- உயர்கல்வி நிறுவனங்களில் கல்வியைத் தொடரும் மாணவர்கள் RM500 ஊக்கத் தொகைக்கு விண்ணப்பிக்க பாங்கி தொகுதியின் சமூக சேவை மையம் அழைப்பு விடுத்துள்ளது.
BantuanAwalPengajian2024Bangi என்ற இணைப்பின் மூலமாகவோ அல்லது சுவரொட்டியில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். இந்த உதவி 100 பேருக்கு மட்டுமே வழங்கப்படும் என்று சட்டமன்ற உறுப்பினர் சையரெட்சன் ஜோஹன் தெரிவித்தார்.
“ஜூலை/செப்டம்பர் 2024 அமர்வுக்கு பொது அல்லது தனியார் பல்கலைக்கழகங்களில் இடம் கிடைத்த பாங்கி நாடாளுமன்ற மாணவர்களுக்கு உதவ நாங்கள் முன்முயற்சி எடுத்து வருகிறோம்.
“விண்ணப்பிக்கும் போது தேவையான ஆவணங்கள் பல்கலைக்கழகக் கடிதம், சம்பள சீட்டு அல்லது வருமான சரிபார்ப்பு அல்லது வாழ்வாதார உதவி சீட்டு மற்றும் பெற்றோரின் இறப்பு அல்லது விவாகரத்து சான்றிதழ்” போன்றவற்றோடு விண்ணப்பிக்கலாம் என்று அவர் முகநூலில் பதிவிட்டிருந்தார்.
விண்ணப்பதாரர்களுக்கான தகுதித் தேவைகள் வாக்காளர்கள் மற்றும் பாங்கி நாடாளுமன்றத்தில் வசிப்பவர்களாக இருத்தல் வேண்டும். மேலும், RM4,850 க்கும் குறைவான குடும்ப வருமானம் மற்றும் ஜூலை/செப்டம்பர் 2024 அமர்வுக்கான பொது அல்லது தனியார் உயர்கல்வி நிறுவனத்தில் வாய்ப்பு பெற்றவராக இருக்க வேண்டும்.
வெற்றிகரமான விண்ணப்பங்கள் குறுஞ்செய்தி முறை அல்லது வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ளப்படும் என்று அவர் அந்த முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.



