
உழைப்புக்கு இலக்கணம் வகுத்தவர் 17 வயது உழைப்பு மரணம் வரை நீடித்தது
கோலாலம்பூர்,டிச.11-
உண்மை, உழைப்பு, உயர்வு என்ற தாரக மந்திரத்தை பின்பற்றி தந்தையின் குத்தகை தொழிலை பின்தொடர்ந்து மேற்கொண்டு மரணபடுக்கை செல்லும் வரை உழைப்பு உழைப்பு என்று உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் ரவிச்சந்திரன் பெருமாள் நாயுடு.
யார் இந்த ரவிச்சந்திரன்? இந்த தேசத்தின் மேடையில் அவரைப்பற்றி சொல்லியே ஆக வேண்டும் என்பதற்காகவே இந்த காணொளியை உங்கள் முன் கொண்டு வருகிறோம்.
ஐயா ரவிச்சந்திரன் அவர்கள் குணாளன் மணியம் அவர்களின் மைத்துனர். குணாளன் மனைவி சரஸ்வதியின் மூத்த சகோதரர். குணாளன்-சரஸ்வதி தம்பதியரின் பிள்ளைகளின் தாய்மாமன். கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி இயற்கையோடு கலந்து விட்ட ரவிச்சந்திரன் உழைப்புக்கு இலக்கணம் வகுத்தவர். ஒரு இளைஞராக 17 வயதில் உழைக்கத் தொடங்கிய ரவிச்சந்திரன் உழைப்பு மரணம் வரை நீடித்தது என்பது தற்போதைய இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணம்.
தேசம் தோற்றுநர் குணாளன் மணியம் அவர்களின் பத்திரிகை பயணம் தொடங்கிய காலத்தில் இருந்து உடனிருந்து ஆலோசனைகள் வழங்கியவர். தன்னுடைய குத்தகை தொழிலில் தன்னுடைய உழைப்பை மூலதனமாக போட்டு தேசம் குணாளன் மணியம் அவர்களுக்கு உழைப்பின் மகத்துவத்தை எடுத்துரைத்தவர்.
சின்ன வயதில் தன் தந்தையோடு உழைத்தவர். தற்போது தன் மகன்களுக்கு தொழிலை கற்பித்து தனக்கு பிறகும் அது தொடர்வதற்கு வழி வகுத்தவர். மரணம் தன்னை தழுவிக் கொள்ளும் என்று துளியும் எதிர்பார்க்காமல் கடைசி வரை தன் கடைசி மகன் சுரேந்திலனிடம் “இதை பார்த்துக் கொள், அதை பார்த்துக் கொள்” அவனிடம் சொல்லி விட்டாயா? என்று கடைசி தருணம் வரை அந்த மனசு உழைப்பை பற்றியே நினைத்து உயிர் விட்டது MP MAL குடும்ப உறுப்பினர்களுக்கு பேரிடியாக அமைந்தது.
தமிழ்நாடு, சென்னையில் நடைபெற்ற தேசம் சாதனையாளர்கள் விருது விழாவில் உழைப்பு இலக்கணம் வகுத்த ஐயா ரவிச்சிரன் அவர்களுக்கு தேசம் விருது வழங்கி கௌரவித்தது. இந்த விருது விழாவில் அவர் இல்லை என்பது எங்களுக்கு துக்கம் என்றாலும் உங்களின் ஆத்மா என்றும் எங்களை வாழ்த்தும் என்று கண்ணீரோடு விடைபெறுகிறோம்…



