Malaysia

பேராசிரியர் மருத்துவர் ஜெயபாலன் வள்ளியப்பனின் நூல் வெளியீட்டு விழா

மஞ்சோங், நவ.18- என்னுடைய எண்ண பதிவுகள் நூல் வடிவில் கொண்டு வந்து மற்றவர்களும் அதனை படித்து இன்புற வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக கண்ணதாசனின் திரையிசை இலக்கியம், அமுதே தமிழே மற்றும் கவிதைகளின் தொகுப்பு நூலை இங்குள்ள சித்தியவான் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மண்டபத்தில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் நூலாசிரியர் பேராசிரியர் டாக்டர் வ.ஜெயபாலன் ஏற்புரையில் தம் கருத்தை பதிவு செய்தார்.

எனக்கு சக்தியும், தன்முனைப்பும் மற்றும் விடாமுயற்சி எண்ணத்தை உருவாக்கி சிறப்பாக செயல்பட ஊக்குவித்த என் பெற்றோர்களுக்கு முதலில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். அவர்கள் வளர்ப்பு மற்றும் என் மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு அவர்களின் ஆவலை இயன்றளவு பூர்த்தி செய்துள்ளேன் என்று அவர் மகிழ்ச்சியுடன் கூறினார்.

இந்த மஞ்சோங் மாவட்டம் சித்தியவான் நகரிலுள்ள மருத்துவமனையில் முதல் முறையாக மருத்துவர் பணி்க்கு அமர்த்தப்பட்டேன். அதன் அடிப்படையில் இங்குள்ள இந்திய மக்களுடன் தொடர்புகள் வளம் பெற்றன. பின், மகப்பேறு மருத்தவ படிப்பை முடித்த பின் மீண்டும் இந்த சித்தியவான் நகருக்கு வர வேண்டிய நிலை உருவானது. அதன் அடிப்படையில் என் வாழ்வில் தொடங்கும் எந்தவொரு ்நிகழ்ச்சியையும் இந்த மஞ்சோங் மாவட்டத்தில் தொடங்குவதை அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில், மூவர் வாழ்த்துரை வழங்கினர். அவர்களில் முனைவர் சேகர் நாராயணன் மஞ்சோங் மாவட்டத்தை சேர்ந்த 11 தமிழ் இயக்கங்கள் ஒன்றிணைந்து இந்நூல் வெளியீட்டு விழாவில் ஆதரவை வழங்கியுள்ளனர். ஆனால், 15 தமிழ்ப்பள்ளிகள் இவ்வட்டாரத்தில் இருந்த போதும் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் வருகை சுணக்கமாகவே இருந்தது. இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக நூல் வழங்க திட்டமிடபட்டது. இருப்பினும், மாணவர்கள் வருகை விரல் விட்டு எண்ணும் அளவில் இருந்துள்ளதை அவர் கோடிக்காட்டினார்.

இந்நிகழ்வில் பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஙே கூ ஹாமின் சிறப்பு அதிகாரி தினகரன் அனைத்து தமிழ்ப்பள்ளிகளுக்கும் இலவசமாக இந்நூலை வழங்கி உதவினார். அவரின் உதவிக்கு ஈப்போ அருணகிரிநாதர் மன்ற அறவாரியத்தினர் தங்கள் நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

இந்நிகழ்வின் நிறைவுவிழாவில் தேவர்கோட்டை இராமநாதனின் சிறப்புரை அனைவரையும் கவர்ந்தது. அத்துடன், நூலாசிரியர் தம் நூல்களை பிரமுகர்களிடம் வழங்கினார். முதல் நூலை மருத்துவர் பத்மநாதன் பெற்றுக்கொண்டார்.ரகுராமனின் கண்ணதாசனின் தத்துவ பாடல்கள் நிகழ்வின் முத்தாய்ப்பாக அமைந்த து. இரவு உணவுடன் நிகழ்வு இனிதே முடிவுற்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button