
இந்திய வாக்காளர்களே சுங்கை பாக்காப் இடைத்தேர்தலின் வெற்றியை தீர்மானிப்பவர்கள்
நிபோங் தெபால், ஜூலை 2-
சுங்கை பாக்காப் மாநில சட்டப் பேரவையின் இடைத்தேர்தலில் பதிவு செய்யப்பட்ட 39,279 வாக்காளர்களில் 17 சதவீதம் மட்டுமே இந்தியர்களாக இருந்தாலும், இந்திய வாக்காளர்களே இந்த இடைதேர்தலின் வெற்றியைத் தீர்மானிப்பவர்கள் ஆவர்.
பெர்பாடுவான் தேர்தல்கள் இயக்குனர் ரஃபிஸி ரம்லி கூறுகையில், மலேசியாவில் உள்ள மாநில சட்டசபைகளின் எண்ணிக்கையில் பார்க்கும்போது, சுங்கை பக்காப் மாநில சட்டசபையில் உள்ள இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கை உண்மையில் மிகப் பெரியது.
ஏனெனில் வாக்காளர்களின் எண்ணிக்கை 10 சதவீதத்தைத் தாண்டினால், அது பெரிய எண்ணிக்கை ஆக 17 விழுக்காடு இந்திய வாக்காளர்கள் இருப்பது பெரியதாக கருதப்படும் என்றார்.
ஆகவே, இடைத்தேர்தலில் போட்டியிடும் பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) மற்றும் பெரிகாத்தான் நேஷனல் (பிஎன்) ஆகிய இரு வேட்பாளர்களும் இந்திய வாக்காளர்களின் வாக்குகளை வெல்வதற்காக பிரச்சாரத்தில் பல்வேறு திட்டங்களுடன் இந்திய சமூகத்தை தீவிரமாக அணுகுவதைக் காண முடிகிறது குறிப்பிடத்தக்கது.



