
சபா வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு SKMM தொடர்பு உதவி
சபா,ஆக.16-
மலேசியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அவசரத் தகவல்களை அளிப்பதற்கும், அவர்களின் குடும்பத்துடன் தொடர்பில் இருப்பதற்கும், அரசாங்கம் முக்கியமான சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்த அவசர சேவைகள் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த அவசர சேவைகளை எவ்வாறு அணுகலாம் என்ற தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (SKMM) வெளியிட்ட அறிக்கையில்
மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (SKMM), சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து தகவல் தொடர்பில் இருப்பதை உறுதி செய்வதற்காக, ரேடியோ மற்றும் ஒருங்கிணைந்த நகரும் இணைய தொடர்பு அமைப்பு (Prime) மற்றும் தேசிய தகவல் பரப்புதல் மையம் (Nadi) போன்ற வசதிகளை வழங்குவதன் மூலம் தங்கள் முயற்சிகளை வலுப்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளது.
தகவல் தொடர்பு வசதிகளுடன் கூடிய ஒரு நடமாடும் வாகனமான Prime அமைப்பு, மீட்புக் குழுக்களுக்கு உதவுவதற்கும், சபா மின்சார நிறுவனம் (SESB) மேற்கொள்ளும் உள்கட்டமைப்பு மறுசீரமைப்புப் பணிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் கம்போங் செண்ட்ரகசிஹ் மற்றும் பெனாம்பாங் ஆகிய பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது.

அதே நேரத்தில், பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் குடும்பங்கள் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க, 131 Nadi மையங்களும் செயல்படுத்தப்பட்டுள்ளன.

மின்சார விநியோகத் தடையால் பாதிக்கப்பட்ட 266 தொலைத்தொடர்பு கோபுரங்களில், தற்போது 147 கோபுரங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கிவிட்டன. தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து மறுசீரமைப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
பாதிக்கப்பட்ட இடங்களில் தற்போதைய நிலவரத்தைக் கண்காணிக்க, SKMM தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் SESB உடன் இணைந்து ஒரு பணிக்குழுவை அமைத்துள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் விரைவாகத் தகவல் தொடர்பு சேவைகளை மீட்டெடுக்க, அவ்வப்போது நடைபெறும் கூட்டங்களில் collector sites (சுற்றுப்புறப் பகுதிகளில் தகவல் தொடர்பு வசதிகளைக் கட்டுப்படுத்தும் முக்கிய தளங்கள்) மற்றும் முக்கியமான இடங்களைச் சீரமைப்பது, தற்காலிக மின்சார விநியோகத்தை உறுதி செய்வது போன்றவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது.
சபா மக்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக, பாதிக்கப்பட்ட பகுதிகளில் தகவல் தொடர்பு மற்றும் இணைய வசதிகளை விரைவாக மீட்டெடுப்பதற்காக, மீட்பு அமைப்புகள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், மற்றும் மாநில, மத்திய அதிகாரிகளுடன் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம் என SKMM அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.



