
Malaysia
பண உதவி தந்த சமூக சேவர்களுக்கு சிறப்பு, நூல் வெளியிட்டு விழாவில் நன்கொடை நன்கொடையாளர்கள் கௌரவிப்பு.
சிம்மோர், செப்.27 – பெரியாரின் 147ஆவது பிறந்த நாள் விழா சந்திப்பு கூட்டத்தின் போது தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு பண உதவி தந்த நன்கொடை நெஞ்சங்களுக்கு சிறப்பு செய்யப்படும் என ஈப்போ பெரியார் தொண்டர் குழுத் தலைவர் மா. லட்சுமணன் தெரிவித்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் மேடான் இஸ்தானா ரிசி பவன் உணவகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த இலவச நிகழ்வில் நூல் வெளியீடு நிகழ்விற்காக கணிசமான தொகை வழங்கி ஆக்கமும் ஊக்கமும் தந்த இளம் தொழில் முனைவர்கள் சிறப்பிக்கப்படுவார்கள் என்றார் அவர்.



