
MalaysiaInternationalPMX - Datuk Seri Anwar Ibrahim
20 அம்ச காசா ஒப்பந்தம்! பிரதமர் அன்வார் டிராம்பிற்கு பாராட்டு
கோலாலம்பூர், அக்.26- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் 20 அம்ச காசா அமைதித் திட்டத்தை ஆசியான் வரவேற்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். “காசாவைப் பொறுத்தவரை, காசா மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உங்கள் விரிவான திட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம்.“இது மிகவும் கடினமான மோதல்களிலும் கூட, ராஜதந்திரமும் உறுதியும் மேலோங்க முடியும் என்ற நம்பிக்கையை உலகிற்கு அளித்துள்ளது,” என்று பிரதமர் அன்வார் தெரிவித்தார். ஆசியான்-அமெரிக்க உச்சிமாநாட்டில் பேசிய அன்வார், டிரம்பின் தலைமை காசாவிலும் உலகிலும் “நீதியான, நீடித்த அமைதிக்கு” வழி வகுக்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாக கேஎல் கன்வென்ஷன் சென்டரில் நடந்த உச்சிமாநாட்டில் டத்தோஸ்ரீ அன்வார் அவ்வாறு சொன்னார்.



