
ஈப்போ தாவீதின் கூடாரத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
சிறப்பு பிரார்த்தனை ஏராளமானோர் பங்கேற்பு
ஈப்போ, ணிச.31-
இயேசு கிறிஸ்துவரின் பிறந்த நாளை அகில உலகமே கொண்டாடும் உன்னத நாளான கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நேற்று ஈப்போ தாவீயின் கூடாராம் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற அதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஈப்போ தாவீதின் கூடாராத்தின் தலைவர், டாக்டர் மேனன் மானசா இந்த நிகழ்வில் கிறிஸ்துமஸ் தின சிறப்பு உரை நிகழ்த்தினார்.
பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை வழங்க வேண்டும் . அதனுடன் கிறிஸ்துவத்தில் குறிப்பாக பைபலில் சொல்லப்பட்ட படிப்பினைகளை பிள்ளைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும் என டாக்டர் மேனன் மானசா தெரிவித்தார்.
அதனுடன், இந்ந உலகத்தில் யேசு ஐயா நமக்கா பிறப்பார். நம்முடைய பிரச்சனைகளை தீர்ப்பார் என்ற நம்பிக்கை நமக்கு வேண்டும். அந்த நம்பிக்கையோடு நாம் கர்த்தரை பிரார்த்திப்போம் என்றார்.
இந்த கிறிஸ்துமஸ் சபையில் சிறப்பு படைப்புகள் இடம்பெற்றன. அதனுடன், அனைவரும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.



