
துணையமைச்சர் டத்தோ ரமணனின் பாட்டியும் மஇகாவின் நீண்டகால உறுப்பினருமான தான்ஸ்ரீ தேவகி கிருஷ்ணன் முதுமை காரணமாக காலமானார்
பெட்டாலிங் ஜெயா, ஜன.21-
மலேசியாவில் பொது சேவை அலுவலகத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் என்ற பெருமையை பெற்றிருந்த தான்ஸ்ரீ தேவகி கிருஷ்ணன் முதுமை காரணமாக காலமானார். அவருக்கு வயது 100.
தான்ஸ்ரீ தேவகி கிருஷ்ணன் இரவு 8 மணியளவில் தனது வீட்டில் முதுமை காரணமாக காலமாநீர் என்று அவரது அவரது பேரனும், தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத்துறை துணை அமைச்சருமான டத்தோ ஆர்.ரமணன் உறுதிப்படுத்தினார்.
சுங்கை பூலோ பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ரமணன், அவரது இறுதிச் சடங்கு குறித்த விவரங்களை குடும்பத்தினர் விவாதித்து வருவதாகக் கூறினார்.
தேவகி, தான் இறக்கும் வரை நீண்ட காலம் மஇகா உறுப்பினராக இருந்தவர்,1952 இல் கோலாலம்பூரில் முனிசிபல் கவுன்சிலில் இடம் பெற்றார். அந்த ஆண்டு பங்சார் தொகுதியிலும் வெற்றி பெற்றார்.
2020 ஆம் ஆண்டில், இலங்கை மற்றும் சிங்கப்பூர் தேர்தல்களில் இரண்டு பெண்கள் வெற்றி பெற்றதன் மூலம் இவருக்கு அரசியல் ஆர்வம் ஏற்பட்டது. அந்த நாட்களில் நடைமுறையில் இதனை நினைத்துப் பார்க்க முடியாது.
பின்னர் அவர் ஓன் ஜபரால் மலாயா கட்சியில் சேர்க்கப்பட்டார். போர்ட்டிக்சனில் பிறந்த தேவகி கிருஷ்ணன், 1959ல் கூட்டணிச் சீட்டின் கீழ் செந்தூல் தொகுதிக்கு போட்டியிட்டார், ஆனால் தோல்வியடைந்தார்.
சிவில் பாதுகாப்பு உறுப்பினராக, அவர் மே 1969 கலவரத்தின் போது மெர்டேக்கா ஸ்டேடியத்தில் மருத்துவ கிளினிக்கிற்குப் பொறுப்பேற்றார், அப்போது சுமார் 3,500 பேர் கலவரத்தால் பாதிக்கப்பட்டிருந்தனர். வீடற்றவர்களைக் கவனிப்பதற்காக அவர் திரும்ப அழைக்கப்பட்டார்.
1999 ஆம் ஆண்டில் ஒற்றைத் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளைப் பராமரிக்க அனுமதிக்கும் வகையில், 1999 ஆம் ஆண்டில் குழந்தைகளின் பாதுகாவலர் சட்டத்தில் திருத்தங்களை முன்வைப்பதில் தேவகி முக்கிய பங்கு வகித்தார்.
தலைநகரில் கார் ஓட்டிய முதல் இந்தியப் பெண்மணி தான்ஸ்ரீ தேவகி கிருஷ்ணன் ஆவார். இவர் பி.கிருஷ்ணனை மணந்த நிலையில் அவர் கடந்த1998இல் காலமானார்.
தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்



