Malaysia

லண்டன் சென்று சேர்ந்துள்ள டத்தோஸ்ரீ எம்.சரவணனுக்கு விமான நிலையத்தில் வரவேற்பு கம்பன் விழா ஏற்பாட்டாளர்கள் வரவேற்றனர்

கோலாலம்பூர்,ஜூலை 12-
கம்பன் விழாவிற்கு சிறப்புப் பிரமுகராக பேருரையாற்ற லண்டன் சென்று சேர்ந்துள்ள டத்தோ ஸ்ரீ எம்.சரவணனுக்கு விமான நிலையத்தில் கம்பன் விழா நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பொன்னாடை அணிவித்து வரவேற்பு நல்கினர்.

பன்னிரண்டாம் நூற்றாண்டில் கவிச்சக்கரவர்த்தி கம்பனால் உருவான கம்பராமாயணம் இன்றும் உலகெங்கும் முழங்கிக் கொண்டிருக்கிறது.
பல்வேறு நாடுகளில் கம்பன் கழகங்களை நிறுவி கம்பன் விழாவை ஆண்டுதோறும் நடத்தி வருகிறார்கள்.

ம.இ.கா தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணன்
அண்மையில் இலங்கையில் நடைபெற்ற கம்பன் விழாவில் சிறப்புப் பிரமுகராகச் சென்று பேருரை ஆற்றியிருந்த
நிலையில் லண்டனில் நடக்கவிருக்கும் கம்பன் விழாவிற்கும் சிறப்புப் பிரமுகராக பேருரையாற்ற டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் லண்டன் சென்றுள்றார்.

அரசியலும் இலக்கியமும் ஆன்மீகமும் ஒரு சேர வாழ்ந்து வருபவர் டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் என்றால் அது மிகையில்லை.

உலகத் தமிழர்கள் மத்தியில் பிரசித்தி பெற்ற ஓர் அரசியல்வாதியாகவும், இலக்கியவாதியாகவும் வலம் வரும் டத்தோஸ்ரீ சரவணன் ஜுலை 13, 14ஆம் தேதிகளில்
லண்டன் அறிவு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் நடைபெறும் கம்பன் விழாவில் கலந்து கொள்ள லண்டன் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button