Malaysia

மக்கோத்தா இடைத்தேர்தல் குறித்து விவாதிக்க தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் 13இல் கூடுகிறது!

கோலாலம்பூர், ஆக. 5 –
ஜொகூர் மாநில மக்கோத்தா சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் குறித்து விவாதிக்க தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் 13ஆம் தேதி சிறப்புக் கூட்டத்தை நடத்த உள்ளது.

ஜொகூர் சபாநாயகர் டத்தோ முகமட் புவாட் சர்காஷியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையத்தின் செயலாளரான டத்தோ இக்மல்ருடின் இஷாக், வெள்ளிக்கிழமை பெற்றதாக கூறினார்.

63 வயதான ஷரிபா அசிசா, குளுவாங்கில் உள்ள என்சே பெசார் ஹஜ்ஜா கல்சோம் மருத்துவமனையில், புதன்கிழமை அனுமதிக்கப்பட்டு, தனக்கு ஏற்பட்ட மூச்சு திணறலுக்கு தீவிர சிகிச்சை எடுத்துக் கொண்ட போது வெள்ளிக்கிழமை திடீரென்று காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button